1. Home
  2. தமிழ்நாடு

இன்று ஆஞ்சநேயரின் வாலில் பொட்டு வைத்து... வெண்ணெய் சாற்றி வழிபட்டால்...

1

ஹனுமனை  வழிபட்டால் பக்தர்களின் துன்பங்கள் அனைத்தும் நீங்கி, நமக்கும் வெற்றிகள் குவியும் என்பது நம்பிக்கை.

அனுமனை மனதில் நினைத்து வழிபடுபவர்களுக்கு எப்படிப்பட்ட இக்கட்டான சூழலிலும் அனைதஅது காரியங்களும் வெற்றி அடையும். அனுமனை வழிபடுபவர்கள் ஆரோக்கிய பலத்துடன் வாழ்வதுடன், இறுதி காலத்தில் ராமரின் அருளால் முக்தி அடைவார்கள் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அனுமனை வழிபடுவதால் சிவனையும், பெருமாளையும் சேர்த்து வழிபட்ட புண்ணியம் கிடைக்கும்.

 அனுமனை வழிபட்டால் மக்கட்பேறு, புகழ், கல்வி, செல்வம் போன்றவற்றை பெறலாம். ஆஞ்சநேயரை வழிபட்டால் மனதில் உள்ள சங்கடங்கள் தீரும். தொழில் அபிவிருத்தி அடைவதுடன், குடும்ப கஷ்டங்கள் அனைத்தும் தீரும், நோய்கள் விலகி ஆரோக்கியமான வாழ்க்கை அமையும். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். கிரக தோஷங்கள் விலகும்.

செவ்வாய், வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் அனுமனை வழிபடுவது மிகவும் சிறப்பான பலன்களை தரும். இந்த கிழமைகளில் அனுமன் கோவிலுக்கு சென்று வெற்றிலை மாலை, துளசி மாலை சாற்றி, வெண்ணெய் நைவேத்தியம் செய்து, தீபம் ஏற்றி அனுமன் காயத்ரி மந்திரங்களை துதித்து வழிபட வேண்டும். இப்படி தொடர்ந்து வழிபட்டு வந்தால் ஆஞ்சநேயர் சிறப்பான பல நல்ல மாற்றங்களை ஏற்படுத்துவார்.

ஆஞ்சநேயரை வழிபட சொல்ல வேண்டிய மந்திரம் :

ஓம் ஜம் ஹரீம்
ஹனுமதே
ராம தூதாய
லங்கா வித்வம்ஸனாய;
அஞ்ஜனா கர்ப்ப ஸ்ம்பூதாய,
ஸாகினீடாகினீ வித்வப்ஸனாய,
கிலகிய பூ பூ காரினே
விபீஷணாய,
ஹனுமத் தேவாய
ஓம் ஐம் ஹரீம்
ஸ்ரீம் ஹராம்
ஹீரீம் ஹரும் பட் ஸ்வாஹா

இந்த மந்திரத்தை கூறி நமது வேண்டுதல் அல்லது பிரார்த்தனையை முன் வைக்கும் போது நாம் எதிர்பார்த்த முடிவை அடைய முடியும்.

முருகனுக்கு எப்படி வேல் வழிபாடு சிறந்ததோ, அதே போல் அனுமனுக்க வால் வழிபாடு சிறந்ததாகும். ஆஞ்சநேயரின் வாலில் பொட்டு வைத்தும், வெண்ணெய் சாற்றியும் வழிபட்டால், வெண்ணெய் உருகுவதை போல் நம்முடைய கஷ்டங்களும் வெண்ணெய் போல் உருகி ஓடி விடும் என்பது நம்பிக்கை. அனுமனுக்கு வடைமாலை சாற்றுவது சிறந்த வழிபாடாகும். வட இந்தியாவில் இவருக்கு ஜாங்கிரி மாலை சாற்றும் வழக்கம் உள்ளது.

அனுமனின் வாலில் தான் சக்தி அதிகம். அதனால் வால் துவங்கும் இடத்தில், வாலின் நுனி பகுதி வரை சந்தனம் குங்குமம் பூசி வழிபட வேண்டும். அனுமன் காயத்ரி சொல்வதால் பாவங்கள், தோஷங்கள் அனைத்தும் விலகும். ஸ்ரீராம ஜெயம் எழுதியும் மாலை கட்டி அனுமனுக்கு அனுவிக்கலாம். இதனால் எடுக்கும் காரியங்களில் வெற்றி கிடைக்கும்.

Trending News

Latest News

You May Like