1. Home
  2. தமிழ்நாடு

இதை மட்டும் நீங்கள் நிரூபித்தால் நான் பீச்சில் நிர்வாணமாக நடக்கிறேன் - சவால் விட்ட ஸ்ரீரெட்டி..!

1

2011ஆம் ஆண்டு, நேனு நானா அபத்தம் என்னும் திரைப்படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகம் ஆனார் நடிகை ஸ்ரீரெட்டி. 

கடந்த 2019ஆம் ஆண்டு, தெலுங்கு திரைப்பட சங்கம் முன்பு, தனது மேலாடையைக் களைந்து, போராட்டத்தில் ஈடுபட்டார். தன்னை படுக்கைக்கு அழைத்ததாக பல்வேறு தென்னிந்திய நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்களைக் குற்றம்சாட்டினார்.ஸ்ரீரெட்டியின் தொடர்குற்றச்சாட்டுகளால், மனித உரிமைகள் அமைப்பு, தெலங்கானா மாநிலத்திற்கு நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி நோட்டீஸ் அனுப்பியது.

நடிகர் விஷால்,நடிகர் ராகவா லாரன்ஸ், இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ், நடிகர் ஸ்ரீகாந்த் ஆகியோர் மீது பாலியல் சுரண்டலில் ஈடுபட்டதாகப் பல்வேறு புகார்களை வெளிப்படையாக அறிவித்தார். இதற்கு, பலரும் மறுப்புத்தெரிவித்து பேசினர்.

இந்நிலையில், சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் ஆந்திர சட்டமன்ற தேர்தலில் ஜெகன் மோகன் ரெட்டிக்கு ஆதரவாக அவர் பேசிவந்தார். மேலும் இந்த தேர்தலில் ஜெகன் மோகன் தோற்றுவிட்டால் “நான் கடற்கரையில் நிர்வாணமாக நடப்பேன்” என்று அவர் சொன்னதாக ஒரு தகவலும் பரவி வருகிறது.

தேர்தலில் ஜெகன் மோகன் தோற்ற நிலையில் “ஸ்ரீரெட்டி நிர்வாணமாக நடக்கவேண்டும் என ரசிகர்கள் அவரை தொல்லை செய்ய, இதற்கு பதிலடி கொடுத்துள்ள ஸ்ரீரெட்டி, "நான் ஆடை இல்லாமல் நடப்பேன் என்று எப்போதும் சொன்னது இல்லை. நான் அப்படி சொன்னேன் என்று ஆதாரம் இருந்தால் வெளியிடுங்கள். 

எனது சமூக வலைதள பக்கத்தில் இருந்து எதையும் நான் நீக்கவில்லை. ஒருவேளை நான் அப்படி சொன்னேன் என்று நீங்கள் நிரூபித்தால் கண்டிப்பாக விசாகப்பட்டினம் கடற்கரையில் ஆடை இல்லாமல் நடப்பேன். உங்களுடைய கேலிக்கும், கிண்டலுக்கும் பயப்படுகிறவள் நான் இல்லை. உங்களை துணிச்சலாக எதிர்கொள்வேன்'' என்று கூறியுள்ளார். 

Trending News

Latest News

You May Like