1. Home
  2. தமிழ்நாடு

நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அரசு வேலை உங்கள் வீடு தேடி வரும் - அண்ணாமலை..!

1

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அண்ணாமலை லிமிட் தாண்டி பேசுவதாக கூறியது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அண்ணாமலை, “லிமிட்டுக்குள்ள தான் இருக்கிறேன். ஏதாவது வெள்ளைக்கோடு போட்டு வைத்துள்ளார்களா என கேள்வி எழுப்பினார்.

மேலும் பங்காளி கட்சிகள்தான் லிமிட்டை தாண்டியுள்ளார்கள் என்றும், சமரசமாக வண்டி ஓட்டி கொண்டிருந்தார்கள். இந்த 5 வருஷம் உங்களுக்கு அடுத்த 5 வருஷம் எங்களுக்கு என்று இப்போது நான் உண்மையை பேசுவதால் லிமிட் தாண்டுவதாக கூறுகிறார்கள் என்றார். தொடர்ந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தங்களுக்கு பாஜக ஒரு பொருட்டே இல்லை என்று கூறியது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அண்ணாமலை, அவர் அப்படியே நினைத்துக்கொண்டிருக்கட்டும்.

அவர்கள் கனவு உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.. காவாலா காவாலா பாடலுக்கு இளைஞர் அணி மாநாட்டில் டான்ஸ் ஆடிக்கொண்டு இருக்க வேண்டியதுதான். திமுகவின் ஆசை இந்த தேர்தலில் நிராசையாகதான் போகும். தேர்தலுக்கு பிறகு தெரியும் காவாலா காவலா வெற்றி பெறுகிறதா? அல்லது என் மண் என் மக்கள் வெற்றி பெருகிறதா என்பது. இம்முறை பாஜக 400க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும்.
நாளை யாருக்கு? 40 யாருக்கு?

தனி பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சி அமைக்கும். கடந்த 5 ஆண்டுகாள 38 திமுக எம்பிக்கள் என்ன கேள்விகளை கேட்டார்கள்? தொகுதி பிரச்சனை குறித்து என்ன பேசினார்கள்? அதனால் என்ன ஆதாயம் கிடைத்தது? என்பது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். பாஜகவை பொறுத்தவரை எப்போது மக்களின் ஏ டீம்மாக உள்ளது என்றார்.

தொடர்ந்து முதல்வர் ஸ்டாலினின் ஸ்பெயின் பயணம் குறித்து பேசிய அண்ணாமலை, உலக முதலீட்டாளர் மாநாடு நடத்தி ஒரு மாதம் முடிவடைவதற்குள், 10 நாட்கள் ஸ்பெயினில் முதல்வருக்கு என்ன வேலை?
நம்மை முட்டாள்கள் என்று திமுக அரசு நினைத்துக்கொண்டிருக்கிறது. இந்தியா வரலாற்றில் எந்த தலைவரும் இப்படி 10 நாட்கள் வெளிநாட்டில் தங்கியது இல்லை. அப்போது இங்கு நடைபெற்ற முதலீட்டாளர் மாநாடு தோல்வியில் முடிந்ததா? அதை முதல்வர் ஸ்டாலினை ஒப்புக்கொள்ள சொல்லுங்கள்” என அண்ணாமலை விமர்சித்தார்.

மேலும்  "பிரதமர் மோடியை எதிர்த்து போட்டியிட இன்றைக்கு வேட்பாளர்கள் இல்லை. தமிழ்நாட்டின் வளர்ச்சி என்பது சைக்கிளை ஸ்டாண்ட் போட்டு ஓட்டுவது போல் உள்ளது. பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அரசு வேலை உங்கள் வீட்டுக் கதவைத் தட்டி வரும்" என்றார்.

Trending News

Latest News

You May Like