1. Home
  2. தமிழ்நாடு

இது மட்டும் நடந்தால் விஜய்க்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பேன் - அர்ஜுன் சம்பத்.!

1

இந்து மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் அர்ஜுன் சம்பத் செய்தியாளர்கள் சந்திபில் பேசியதாவது,

சென்னையில் நடைபெற்ற பிராமணர்கள் சமுதாய மாநாடு தமிழகத்தில் இன்று பேசு பொருளாக மாறி உள்ளது. பிராமண சமுதாயம் கேலி கிண்டலுக்கு ஆளானது. பிராமண சமுதாயம் பாதுகாக்கப்பட வேண்டும். கடந்த 70 ஆண்டுகள் தமிழகத்தில் பிராமண சமுதாய மக்கள் ஒடுக்கப்பட்டனர்.

நடிகை கஸ்தூரி தெலுங்கு மக்களுக்கு எதிராக பேசிவிட்டார் என ஆங்காங்கே பிரித்து வெட்டி ஒட்டி செய்திகளை பரப்பி, பெண் என்றும் பாராமல் திராவிட சிந்தனைகள் கொண்ட தொலைக்காட்சிகள் அவரை சித்தரித்து காட்டியுள்ளது. தெலுங்கு, தமிழ் எல்லாம் வேறு வேறு இல்லை. எல்லாம் ஒரே தொப்புள் கொடி உறவு.

அமரன் திரைப்படம் இந்திய ராணுவத்தை உயர்த்திக் காட்டி உள்ளது. இப்படத்தின் மூலம் வந்த பணத்தை இந்திய ராணுவத்திற்கு ஒப்படைக்க வேண்டும்.

பள்ளிக்கல்வித்துறை இன்று மோசமாக உள்ளது. அரசு பள்ளிகளில் மாணவர்களிடம் கஞ்சா பழக்கங்கள் அதிகம் உள்ளது. பள்ளிக்கல்வித்துறை அமைச்சரை எடுத்துவிட்டு அவருக்கு பதிலாக மூத்த அமைச்சரை நியமனம் செய்யலாம். அன்பில் மகேஷ் பொய்யாமொழியை துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின் தனக்கு உதவியாளராக வைத்துக் கொள்ளலாம் அல்லது அவரது ரசிகர் மன்ற தலைவராக வைத்துக் கொள்ளலாம்.

தமிழக வெற்றி கழகம், அண்ணாமலை போன்று திமுகவின் ஊழலை அம்பலப்படுத்துவதாக அறிவித்திருக்கிறார்கள். அதை நான் வரவேற்கிறேன். வரும் தேர்தலில் ஐந்து முனை போட்டியாக இருக்கும். வரக்கூடிய சட்டமன்றத் தேர்தல் திமுக - பாஜகவிற்கான தேர்தலாக இருக்கும்.

2026 தேர்தலில் சில கிறிஸ்தவர்கள் ஓட்டு, நாம் தமிழர் கட்சி ஓட்டு, சிறுத்தைகள் ஓட்டு வேண்டுமென்றால் தவெகவிற்கு செல்லலாம். தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் பாஜகவுடன் கூட்டணி வைத்தால் ஜோசப் விஜய்க்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பேன். தமிழ்நாட்டில் காமராஜருக்கு பிறகு திராவிட கட்சிகளிலேயே நாட்டை ஆண்ட சிறந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தான் என தெரிவித்தார்.

 

Trending News

Latest News

You May Like