1. Home
  2. தமிழ்நாடு

நாங்கள் கொடுத்த பண்த்தை முறையாக செலவிட்டிருந்தால் மிக்ஜாம் புயலால் சென்னை பாதிக்கப்பட்டிருக்காது..!

1

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், 

தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜகவுக்கு பணம் வருகிறது என்கிறார்கள். ஏன் திமுகவுக்கு தேர்தல் பத்திரம் மூலம் பணம் வரவில்லையா? அதுவும் ஒரே நபரிடம் இருந்து அவ்வளவு பணம் கிடைக்க அவர்களுக்குள் என்ன கொடுக்கல் வாங்கல் உள்ளது. சென்னைக்கு ரூபாய் 5000 கோடியை சிறப்பு நிதியாக வழங்கியுள்ளோம். வெள்ள பாதிப்பு ஏற்பட்ட உடன் தமிழகத்துக்கு 900 கோடியை ஒதுக்கினோம். இந்த இரண்டு நிதிகளையும் தமிழக அரசு என்ன செய்தது. ஏற்கனவே வழங்கிய நிதிக்கு தமிழக அரசு கணக்கு கூற வேண்டும். 

5000 கோடியை முறையாக செலவிட்டிருந்தால் மிக்ஜாம் புயலால் சென்னை பாதிக்கப்பட்டிருக்காது. ரூபாய் 5000 கோடியை 90% செலவழித்து மழை நீர் வடிகால் பணிகளை செய்ததாக கூறினார்கள். ஆனால் பாதிப்பு ஏற்பட்டதும், பாதிப்புக்கு பின் 90% பணிகள் முடியவில்லை என்றார்களே. மோடி அரசிடம் நிவாரண நிதி வரவில்லை என்று கூறினார்கள். உண்மையை பேசுங்கள். நிவாரண நிதி உயர்மட்ட ஆலோசனை முடிந்த பிறகு வரத்தான் போகிறது. 

போதைப் பொருள் விவகாரத்தில் தமிழகத்தில் நிலையை பார்த்தால் கண்ணீர் வருகிறது. குஜராத்தில் மட்டும் போதைப் பொருள் கைப்பற்ற படுகிறதா தமிழகத்தில் ராமேஸ்வரத்தில் கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்கள் என்ன சொல்வது. நேரு கச்சத்தீவை ஒரு தொல்லை என்றுள்ளார். இந்திரா காந்தியோ கச்சத்தீவை ஒரு சிறிய பாறை என்று கூறியுள்ளார்.  ஒரு நாட்டின் பாதுகாப்பு விஷயத்தையும் இறையாண்மை சம்பந்தப்பட்ட விஷயத்தையும் தேர்தலுக்காக தான் நான் பேச வேண்டும் என்பதில்லை. எப்போது வேண்டுமானாலும் பேசலாம். அது நமது உரிமை. அதனால் இப்போது பேசப்படுகிறது.

கச்சத்தீவு தொடர்பாக 50 ஆண்டுகளாக உண்மைக்கு புறம்பான பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது. பொறுப்பில்லாத பேச்சுக்கள் நிறைய பேசப்படுகின்றன. கச்சத்தீவு பிரச்சனை நமது மீனவர்கள் வாழ்க்கையின் ஓர் அங்கம்.  திமுக காங்கிரஸ் கட்சி அப்போது கூட்டணி வைத்திருந்தன. இப்போதும் கூட்டணி வைத்துள்ளனர். காங்கிரஸ் ஒரு தேசிய கட்சியாக இருந்து கொண்டு அதற்கு விளக்கம் கொடுக்காமல், அதைப் பேசக்கூடாது என்று சொல்லுகிறது. 1974 வெளியுறவு செயலாளர் விரிவாக எடுத்துக் கூறியும், இதற்கெல்லாம் அப்போதைய முதல்வர் கருணாநிதி எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆனால் பொய் பிரச்சாரம் மட்டும் செய்கிறார்கள். இதனை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்றே உண்மை தகவலை வெளியிட்டோம்.

தேர்தலுக்காக மட்டும் அல்ல. தேர்தல் இருந்தாலும் இல்லாவிட்டாலும் சொல்ல வேண்டிய விஷயம் இது.  தமிழக மக்களுக்கு விரோதமான செயல்களை காங்கிரஸ் கட்சி செய்யும்போது திமுக அமைதி காத்தது.  ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தடை விதித்த போது காங்கிரசுடன் திமுகவே கூட்டணி. இப்படியாக தமிழக மக்களுக்கு விரோதமான செயல்களை காங்கிரஸ் ஒவ்வொரு முறையும் பண்ணும் போதும் ஒரு போராட்டம் கூட திமுக செய்யவில்லை. மாறாக இப்போது 21 முறை பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதுகிறார்கள். இந்த விவகாரத்தில் 10 ஆண்டுகளாக என்ன செய்தோம் என கேட்கிறார்கள். உச்சநீதிமன்றத்தில் கச்சத்தீவு தொடர்பாக இரண்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன. அது விசாரணைக்கு வரும்போது இதை பற்றி பேச முடியும்.

Trending News

Latest News

You May Like