குயில் கூவத் தொடங்கிவிட்டால்... வைரலாகும் வைரமுத்து ட்வீட்..!
![1](https://newstm.in/static/c1e/client/106785/uploaded/b02d86048ab2c90fcdbc8e457a224911.jpg?width=836&height=470&resizemode=4)
இசை பெரியதா, பாடல் வரிகள் பெரியதா என்னும் பட்டிமன்றம் சமீபகாலமாக தமிழ் சினிமாவில் அலையடித்துக் கொண்டிருக்கிறது. இளையராஜா கூறிய கருத்துக்கு பதில் தெரிவிப்பது போல வைரமுத்துவும் பேசி வைக்க, அதற்கு கங்கை அமரன் ஆவேசமாக பதிலடி கொடுத்திருந்தார்.
வைரமுத்து இத்தோடு நிறுத்திக் கொள்ளவேண்டும் என்று எச்சரிக்கை தொனியில் வீடியோவும் பேசி வெளியிட்டிருந்தார்.இதன்பின்னரும் நீருபூத்த நெருப்பாய் இருந்துவருகிறது இந்த சர்ச்சை.
இந்த நிலையில் கவிப்பேரரசு வைரமுத்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில் கவிதை வடிவில் பதிவிட்டுள்ளது மீண்டும் விவாதப் பொருளாகி இருக்கிறது.
குயில்
கூவத் தொடங்கிவிட்டால்
காடு தன் உரையாடலை
நிறுத்திக்கொள்ள வேண்டும்
புயல்
வீசத் தொடங்கிவிட்டால்
ஜன்னல் தன் வாயை
மூடிக்கொள்ள வேண்டும்
வெள்ளம்
படையெடுக்கத் தொடங்கிவிட்டால்
நாணல் நதிக்கரையில்
தலைசாய்த்துக்கொள்ள வேண்டும்
மக்கள்
தனக்காகப்
பேசத் தொடங்கிவிட்டால்
கவிஞன் தன் குரலைத்
தணித்துக்கொள்ள வேண்டும்
அதுதான்
நடந்து கொண்டிருக்கிறது
இவ்வாறு வைரமுத்து தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
குயில்
— வைரமுத்து (@Vairamuthu) May 4, 2024
கூவத் தொடங்கிவிட்டால்
காடு தன் உரையாடலை
நிறுத்திக்கொள்ள வேண்டும்
புயல்
வீசத் தொடங்கிவிட்டால்
ஜன்னல் தன் வாயை
மூடிக்கொள்ள வேண்டும்
வெள்ளம்
படையெடுக்கத் தொடங்கிவிட்டால்
நாணல் நதிக்கரையில்
தலைசாய்த்துக்கொள்ள வேண்டும்
மக்கள்
தனக்காகப்
பேசத் தொடங்கிவிட்டால்
கவிஞன் தன்…