1. Home
  2. தமிழ்நாடு

மீண்டும் பாஜக மத்தியில் ஆட்சிக்கு வரும் சூழல் இருந்து எங்களின் ஆதரவு தேவைப்பட்டால்... திண்டுக்கல் சீனிவாசன் பேட்டி..!

1

திண்டுக்கல்லில் முன்னாள்அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ஓபிஎஸ் மற்றும் பாஜகவின் ஆதரவால்தான் நான்கரை ஆண்டுகள் எடப்பாடி பழனிசாமியால் ஆட்சி செய்ய முடிந்ததாக கூறியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த திண்டுக்கல் சீனிவாசன், எடப்பாடி பழனிசாமியின் ஆதரவு இருந்ததால்தான், ஓ பன்னீர்செல்வம் வேட்டிக் கட்டி ஆம்பளை போல் வெளியில் வந்தார். இப்போது தெய்வம் கொடுத்த தண்டனை அதிமுக வேட்டிக் கட்ட முடியாமல் உள்ளார். இது தெய்வம் தந்த தீர்ப்பு. ஓபிஎஸ் பேசுவதெல்லாம் ஒரு பொருட்டே கிடையாது என்றும் திண்டுக்கல் சீனிவாசன் கூறினார்.

மெஜாரிட்டி இருந்ததால்தான் தமிழகத்தில் ஆட்சி நான்கரை ஆண்டுகள் ஆட்சி செய்ய முடிந்தது. ஓபிஎஸ் ஆதரவில் நாங்கள் இல்லை. எடப்பாடியாருக்கு ஆதரவாக 70 எம்எல்ஏக்களுக்கு மேல் உள்ளனர். தேர்தலில் சொற்ப வாக்குகளில் தோல்வியை சந்தித்துள்ளோம். அடுத்த தேர்தலில் 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவோம்.தமிழகத்தில் பாஜகவை அழிக்கும் வரை ஓயமாட்டோம் என்றும் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார்.

பாஜக மீண்டும் மத்தியில் ஆட்சிக்கு வரும் சூழல் இருந்து எங்களின் ஆதரவு தேவைப்பட்டால் ஆதரவு தர மாட்டோம் என்றும் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார். மேலும் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்த எடப்பாடி பழனிசாமி அறிவிப்பார் என்றும் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார்.

Trending News

Latest News

You May Like