1. Home
  2. தமிழ்நாடு

காவிரி விவகாரம் தொடர்பாக கன்னட நடிகர்கள் போராடினால் தமிழகத்தில் திரையரங்குகள் கிடைக்காது : சீமான்..!

1

காவிரியில் தமிழகத்துக்கு உரிய தண்ணீரை திறந்து விட மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்காததை கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பில் சென்னை எழும்பூரில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மாநில நிர்வாகிகள், மண்டல மற்றும் மாவட்ட நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். இதில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்று பேசினார். அப்போது சீமான் கூறியதாவது:- 

காவிரி விவகாரத்தில் காங்கிரசும், பா.ஜ.க.வும் மாநில கட்சிகளாக செயல்படுகின்றன. காவிரி விவகாரத்தில் கர்நாடக மக்களுக்கு உண்மையாக இருக்க அம்மாநில ஆட்சியாளர்கள் நினைக்கிறார்கள். காவிரி விவகாரம் தொடர்பாக கன்னட நடிகர்கள் போராடினால் அவர்களுக்கு தமிழகத்தில் திரையரங்குகள் கிடைக்காது. இவ்வாறு அவர் கூறினார். 

Trending News

Latest News

You May Like