இவர் நாக்கை அறுத்தால் 10 லட்சம் தரப்படும்... போஸ்டரால் சர்ச்சை..!
![1](https://newstm.in/static/c1e/client/106785/uploaded/c4a4f6acd19c6a447e83a60e64bc91ae.jpg?width=836&height=470&resizemode=4)
இந்து கடவுள்களை அவமதிப்பதாக லாலுவின் RJD எம்எல்ஏ பதே பகதூர் குஷ்வாஹாவும் சர்ச்சையில் சிக்கியிருக்கிறார்.
சரஸ்வதி குறித்து பாடப் புத்தகங்களில் இருந்து நீக்க வேண்டும், இந்து கடவுள் சரஸ்வதியின் பிறப்பு தொடர்பான புராணங்களை சுட்டிக்காட்டி சரஸ்வதியை எப்படி வணங்க முடியும்?மனுஸ்மிருதி சொல்லும் 33 கோடி தேவர்கள் எங்கே இருக்கிறார்கள் எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.
ஆங்கிலேயர்கள் ஆட்சியில் கடவுள் துர்கா தேவி எங்கே இருந்தார்? ஏன் ஆங்கிலேயர்களை அவர் கொல்லவில்லை எனவும் கேள்வி கேட்டிருந்தார் குஷ்வாஹா. அத்துடன் நிற்கவில்லை.. எங்களுக்கு லாலு பிரசாத் யாதவ்தான் கடவுள். ராமர் உள்ளிட்ட கடவுள் பாத்திரங்கள் அனைத்துமே கற்பனை. பிராமணர்கள், மூடநம்பிக்கையை பரப்புகிறவர்கள் என பதே பகதூர் விமர்சித்தது பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது
இந்நிலையில் இந்து சிவ பவானி சேனா என்ற அமைப்பினர் குஷ்வாஹாவுக்கு எதிராக போஸ்டர்களை ஒட்டி உள்ளனர். இதனையடுத்து, அவரது நாக்கை அறுத்தால் ₹10 லட்சம் வழங்கப்படும் என இந்து சிவ பவானி சேனா என்ற அமைப்பு அறிவித்துள்ளது.