1. Home
  2. தமிழ்நாடு

என்னை விட பாஜக அதிக வாக்குகளை வென்றுவிட்டால் கட்சியை கலைத்துவிட்டு செல்கிறேன் - சீமான்..!

1

நாடாளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதில் 5 கட்ட தேர்தல் முடிவடைந்த நிலையில், இன்று 6-வது கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடந்து முடிந்துவிட்டது. தேர்தல் முடிவுகள் வரும் ஜூன் 4-ம் தேதி வெளியாகவுள்ளது.

இதனிடையே, அண்மையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, "நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் 3-வது பெரிய கட்சியாக பாஜக உருவாகும். பாஜக தெற்கில் அசுர வளர்ச்சி பெற்று வருகிறது" எனக் கூறினார். இந்நிலையில், அண்ணாமலை இவ்வாறு கூறியது குறித்து சீமானிடம் நிருபர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்து சீமான் கூறியதாவது:

ஆண் மகன் என்றால் தனியாக வர வேண்டும். தனியாக போய் சண்டை போட வேண்டும். ஒத்தைக்கு ஒத்தையாக களத்தில் நிக்கணும். அவன் தான் ஆம்பளை. அவன் தான் வீரன். ஜூன் 4-ம் தேதிக்கு பிறகு அண்ணாமலையை வர சொல்லுங்கள். பாஜக தனித்து தேர்தலில் போட்டியிடட்டும். நானும் போட்டியிடுகிறேன். என்னை விட பாஜக அதிக வாக்குகளை வென்றுவிட்டால், உடனடியாக கட்சியை கலைத்துவிட்டு செல்கிறேன். அண்ணாமலைக்கு மோதி பார்க்க தைரியம் இருக்கிறதா?" என்று சீமான் கேள்வியெழுப்பினார்.

Trending News

Latest News

You May Like