யாரிடமாவது பஹல்காம் தாக்குதலில் எடுத்த போட்டோ, வீடியோ ஆதாரம் இருந்தால் வழங்கலாம் - என். ஐ.ஏ..!

பஹல்காம் தாக்குதல் விவகாரத்தை மத்திய உள்துறை அமைச்சகம் என். ஐ.ஏ விசாரிக்க உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து பஹல்காம் தாக்குதல் நடந்த பகுதியில் என். ஐ.ஏ அதிகாரிகள் முகாமிட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் பஹல்காம் தாக்குதல் குறித்து கூடுதல் ஆதாரம் ஏதேனும் இருந்தால் பொதுமக்கள் வழங்கலாம் என்று என். ஐ.ஏ தெரிவித்துள்ளது. தாக்குதல் நேரத்தில் பஹல்காமில் எடுத்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை வழங்க கோரிக்கை விடுத்துள்ளனர்.