ஐஏஎஸ் அதிகாரிகள் தொடர்ந்து ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்..!
தமிழக அரசின் முக்கியத் துறைகளில் பணியாற்றி வந்த ஐஏஎஸ் அதிகாரிகள் நேற்று துறை மாற்றம் செய்யப்பட்டனர். இந்நிலையில் இன்று ஐபிஎஸ் அதிகாரிகளின் பணியிட மாற்றம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை கிழக்கு மண்டல இணை ஆணையராக இருந்த தர்மராஜன், சென்னை காவல்துறை நுண்ணறிவு பிரிவு இணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
நுண்ணறிவு பிரிவு துணை ஆணையரான அரவிந்த் திருச்சி மாவட்ட தலைமையிட துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.