1. Home
  2. தமிழ்நாடு

பிச்சை போட்டேன்னு நினைச்சுக்கிறேன்.. வெளுத்து வாங்கிய பாக்யா!

1

பாக்கியலட்சுமி சீரியல் இன்றைய எபிசோட்டில், சுதாகர் இனிமே இது சுதாகரோட ரெஸ்டாரன்ட் என்கிறான். இந்த ரெஸ்டாரன்ட்கும் உங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்ல என சொல்ல, அஞ்சு கிலோமீட்டருக்கு ஒரு ரெஸ்டாரன்ட் இப்படிதான் மத்தவங்க வயித்துல அடிச்சு வாங்கினீங்களா என்று நாக்கை பிடுங்குவதை போல் கேட்கிறாள் பாக்யா. சுதாகர் வார்த்தையை விடாதீங்க சம்பந்தி என்று சொல்ல, இந்த ரெஸ்டாரண்ட்க்காக சொந்த பையனோட வாழ்க்கையை அடமானம் வைச்சவர் தான நீங்க என்று கேட்கிறாள்.

இதனால் கடுப்பாகும் சுதாகர், என்ன சம்மந்தி பேசிக்கிட்டே போறீங்க. இது சரி இல்லை என்று சொல்லுகிறான். நான் அப்படி தான் பேசுவேன். அதுதான் உண்மை என்று பாக்யா சொல்ல, உங்க பொண்ணு என் வீட்டுல வாழுறா. அதனை மறந்துவிட்டு பேசுறீங்க சம்பந்தி என்கிறான் சுதாகர். அதற்கு பாக்யா ரெஸ்டாரன்ட் கூட நான் விட்டு தருவேன். எவ்வளவு பேருக்கு எவ்வளவு விஷயத்துல விட்டு கொடுத்து இருக்கேன். அதே மாதிரி இந்த ரெஸ்டாரண்ட்டை உங்களுக்கு பிச்சை போட்டதா நினைச்சுக்கிறேன் என்கிறாள். சுதாகர் உச்சக்கட்ட கோபம் அடைந்து குரலை உயர்த்த, பாக்யாவும் விரலை நீட்டி எச்சரிக்கிறாள்.

ரெஸ்டாரன்ட் போறதுல எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. ஆனா என் பொண்ணுக்கு மட்டும் ஏதாவது ஒன்னுனா யாராயிருந்தாலும் நான் சும்மா விடமாட்டேன் என எச்சரிக்கிறாள் பாக்யா. உடனே சுதாகர், இதுக்கு மேல உங்ககிட்ட விவாதம் பண்ண விரும்பலை. நைட் வரைக்கும் தான் டைம். கிளம்பி போயிட்டே இருக்கனும். என்னோட சொந்தக்காரங்க சம்பந்தி அப்படின்னு விட்டுடாதீங்க. யாரா இருந்தாலும் அடிச்சு வெளியே துறத்துங்க என சொல்லிவிட்டு அங்கிருந்து போகிறான் சுதாகர்.

இதனையடுத்து பாக்யா என்ன செய்வது என புரியாமல் சோகமாக உட்கார்ந்து இருக்க, அனைவரும் வந்து வேலை போச்சுன்னா என்ன பண்றது என வருத்தமாக பேசுகின்றனர். அவர்களிடம் நாளைல இருந்து பழைய ரெஸ்டாரண்ட் வந்துடுங்க என சொல்ல, செல்வி அது எப்படிக்கா சரியா வரும். அங்கு ஏற்கனவே அவ்வளவு பேர் இருக்காங்க என்கிறாள். அதற்கு பாக்யா வேற என்ன பண்ண முடியும். இப்போதைக்கு இந்த பிரச்சனையை சமாளிச்சு தான் ஆகனும் என சொல்கிறாள்.


அதனை தொடர்ந்து அனைவரும் கிளம்ப, பாக்யா ரெஸ்டாரண்ட் போர்ட்டை எல்லாம் பார்த்து அழுகிறாள். செல்வி அவளை சமாதானம் செய்தது அழைத்து போகிறாள். அவள் மன உளைச்சலில் இருக்க, பாக்யா செல்வி ஆறுதல் சொல்கிறாள். அதன்பின்னர் வீட்டுக்கு வரும் பாக்யாவிடம் எல்லாரும் பேச, எந்த பதிலும் பேச சாப்பிட்டு விட்டு தூங்க போகிறாள் பாக்யா. இதனால் அனைவரும் குழம்புகின்றனர். இப்படியாக பாக்கியலட்சுமி சீரியல் இன்றைய எபிசோட் நிறைவடைந்துள்ளது.

Trending News

Latest News

You May Like