மீண்டும் கூறுகிறேன்... பஹல்காம் தாக்குதலில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர்களுக்கு நிச்சயம் நீதி கிடைக்கும்..!

பிரதமர் மோடி இன்று தனது 121வது மன்-கி-பாத் நிகழ்ச்சியில் வானொலி வாயிலாக உரையாற்றினார்.
அதில், கடந்த சில ஆண்டுகளில் காஷ்மீர் யாரும் எதிர்பாராத வளர்ச்சியை அடைந்துள்ளது. சுற்றுலா துறை பெரிதும் வளர்ந்துள்ளது. இளைஞர்களுக்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படத் தொடங்கின. ஜனநாயகம் மேலும் வலுவடையத் தொடங்கியது. புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.
இவை அனைத்தும் எதிரிகளுக்கு பிடிக்கவில்லை. காஷ்மீரின் வளர்ச்சியை விரும்பாதவர்கள் தான், அங்கு பயங்கரவாத தாக்குதலை மீண்டும் ஒருமுறை நிகழ்த்தியுள்ளனர் என்று பிரதமர் மோடி தெரிவித்தார். நான் மீண்டும் ஒருமுறை உறுதி கூறுகிறேன். பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர்களுக்கு நிச்சயம் நீதி கிடைக்கும்.
உயிரிழந்தவர்களுக்காக எனது ஆழ்ந்த வருத்தங்கள். இந்த தாக்குதல் சம்பவத்தால் ஒவ்வொரு இந்திய குடிமகனும் கடும் கோபத்தில் இருக்கின்றனர். பயங்கரவாதத்தின் சவால்களை முறியடிக்க நாம் ஒன்றிணைந்து நிற்க வேண்டும். பஹல்காம் தாக்குதலின் பின்னணியில் இருப்பவர்களை இந்தியா வீழ்த்தும் என்று பிரதமர் மோடி குறிப்பிட்டார்.