எனக்கு ஆண் குழந்தை தான் வேண்டும்.. மனைவியின் வயிற்றை கிழித்த கொடூர கணவன் !

உத்தர பிரதேசத்தின் நெக்பூர் பகுதியில் பன்னலால் என்பவர் தனது மனைவியுடன் வசித்து வந்தார். இத்தம்பதிக்கு ஏற்கனவே 5 பெண் குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் அவரது மனைவி 6ஆவது முறையாக கர்ப்பமானார்.
இந்த முறை தனக்கு ஆண் குழந்தை வேண்டுமென்று அவர் நினைத்துள்ளார். மனைவியும் கர்ப்பிணியாக இருக்கும் நிலையில் வயிற்றில் இருப்பது ஆண் குழந்தையா என தெரிந்துகொள்வதற்காக கொடூரமான திட்டம் போட்டுள்ளார்.
அதன்படி குழுந்தையை பார்க்க பன்னலால் தனது மனைவியின் வயிற்றை கிழித்து பார்த்ததாக கூறப்படுகிறது. கூர்மையான ஆயுதத்தால் கிழித்ததில் 35 வயதான மனைவி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்.
இதனை அறிந்த குடும்பத்தினர் உடனடியாக கர்ப்பிணியை மீட்டு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்துள்ளனர். கர்ப்பிணியின் குடும்பத்தினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் பன்னலால் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.
newstm.in