1. Home
  2. தமிழ்நாடு

என் இசை நிகழ்ச்சிகளில் கிடைத்த தொகையை நன்கொடையாக அளிக்க முடிவு செய்துள்ளேன் - இளையராஜா..!

W

இந்தியா- பாகிஸ்தான் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்தியா, பாகிஸ்தானில் பயங்கரவாதிகளின் முகாம்களை மட்டுமே தாக்கிய நிலையில், அந்த நாட்டு ராணுவம், இந்தியாவில் பொதுமக்கள் குடியிருக்கும் பகுதிகளை ஏவுகணைகள், டிரோன்கள் மூலம் தாக்கி வருகிறது.

எல்லைப் பகுதியில், இந்திய நகரங்களை குறிவைத்து டிரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வருகிறது. ஆனால், வானிலையே இடைமறித்து சுட்டு வீழ்த்தி நமது பாதுகாப்பு படையினர் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் இசைஞானி இளையராஜா தன் எக்ஸ் தள பக்கத்தில், 

என் நாடு மீது பெருமிதம் கொண்ட ஒரு இந்தியனாகவும், பாராளுமன்ற உறுப்பினராகவும், என் இசை (Valiant) நிகழ்ச்சிகளில் கிடைத்த தொகையும், ஒரு மாத சம்பளமும் சேர்த்து, "தேசிய பாதுகாப்பு நிதிக்கு " (National Defence Fund) நன்கொடையாக அளிக்க முடிவு செய்துள்ளேன்.

இந்த நன்கொடை என் "Valiant" இசைக்கு மட்டும் அல்ல - நம் நாட்டின் வீரர்களின் வலிமைக்கும், தீவிரவாதத்தை ஒழிக்க அவர்கள் காணும் தியாகத்திற்கும் உரிய மரியாதை!"

ஜய பேரிகை கொட்டடா, கொட்டடா, ஜய பேரிகை கொட்டடா!பாரதி.


 


 

Trending News

Latest News

You May Like