’இந்த கோஷம் வேணாமே’..! ரசிகர்களுக்கு அஜித் வேண்டுகோள்...!
நடிகர் அஜித்குமாரின் ரசிகர்கள் பலரும் அவருடைய பெயருடன் கடவுள் எனச் சேர்த்து ஆங்காங்கே கோஷமிடுவது அதிகரித்துவருகிறது. இந்த நிலையில் இப்படி தன் பெயருக்கு முன் எந்த ஒட்டுச் சொல்லையும் போட்டு அழைக்கக்கூடாது என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுதொடர்பான அவரின் இன்றைய அறிக்கை:
”சமீபமாக முக்கியமான நிகழ்வுகளில், பொதுவெளியில் அநாகரீமாக, தேவையில்லாமல் எழுப்பப்படும் 'க. அஜித்தே 'என்ற இந்த கோஷம் என்னை கவலையடையச் செய்திருக்கிறது எனது பெயரைத் தவிர்த்து என் பெயருடன் வேறு எந்த முன்னொட்டும் சேர்த்து அழைக்கப்படுவதில் நான் துளியும் உடன்படவில்லை. எனது பெயரில் மட்டுமே நான் அழைக்கப்பட வேண்டும் என விரும்புகிறேன்.
எனவே, பொது இடங்களிலும் மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் அசௌகரியத்தை ஏற்படுத்தும் இந்தச் செயலை நிறுத்துவதற்கு உங்கள் ஒத்துழைப்பை நான் அன்புடன் வேண்டுகிறேன்.
என்னுடைய இந்தக் கோரிக்கைக்கு உடனடியாக மதிப்பு கொடுப்பீர்கள் என்று நம்புகிறேன்.
யாரையும் புண்படுத்தாமல் கடினமாக உழைத்து, உங்கள் குடும்பத்தைக் கவனித்துக் கொள்ளுங்கள். சட்டத்தை மதிக்கும் குடிமக்களாக இருங்கள்.
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் அழகான வாழ்க்கை அமைய வாழ்த்துகள்.
வாழு வாழ விடு
அன்புடன்
அஜிக்குமார்” என்று அவரின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
From The Desk of AK pic.twitter.com/0W4dspCg26
— Suresh Chandra (@SureshChandraa) December 10, 2024