1. Home
  2. தமிழ்நாடு

மனைவியின் புகைப்படத்தை ஆபாசமாக இணையத்தில் வெளியிட்ட கணவன்!

மனைவியின் புகைப்படத்தை ஆபாசமாக இணையத்தில் வெளியிட்ட கணவன்!


பிரிந்து வாழும் மனைவியை பழிவாங்க அவரின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளங்களில் பரப்பிய கணவர் கைது செய்யப்பட்டார்.

மதுரை மாவட்டம் சோழவந்தான் தெற்கு ரத வீதியை சேர்ந்த பெண்ணுக்கும், கன்னியாகுமரி அருகே தக்கலையில் கம்யூட்டர் சென்டர் நடத்தி வரும் ராஜமுருகன் என்பவருக்கும் கடந்த 2018ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

திருமணமான சில நாட்களிலேயே ராஜமுருகன் குடிபோதையில் தனது மனைவியை சித்ரவதை செய்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த ரம்யா திருமணமான 20 நாட்களிலேயே பெற்றோர் வீட்டுக்கு வந்துவிட்டார்.

பிரிந்து சென்ற மனைவி ரம்யாவை பழிவாங்க எண்ணிய ராஜமுருகன் ரம்யாவின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து, மார்பிங் செய்த புகைப்படங்களை பேஸ்புக், வாட்ஸ்ஆப், டிவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் பதிவேற்றியதோடு பெண் வீட்டாருக்கும் வாட்ஸ்ஆப்-ல் அனுப்பி வைத்துள்ளார்.

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த ரம்யா, தனது புகைப்படத்தை சமூக வலைதளங்களில் ஆபாசமாக பதிவேற்றம் செய்த கணவர் ராஜமுருகன் மீது சோழவந்தான் காவல் நிலையத்தில் புகாரளித்தார். ரம்யா அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

கடந்த ஆறுமாத காலமாக தலைமறைவாக இருந்த ராஜமுருகனை, ஆய்வாளர் வசந்தி தலைமையிலான போலீசார் கைதுசெய்து வாடிப்பட்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

newstm.in

Trending News

Latest News

You May Like