1. Home
  2. தமிழ்நாடு

ஆண் நண்பர்களை தேடும் கணவன் -அதிர்ச்சியான மனைவி  ..!

ஆண் நண்பர்களை தேடும் கணவன் -அதிர்ச்சியான மனைவி  ..!


ஆண்கள் ஆண்களயும் , பெண்கள் பெண்களையும் திருமணம் செய்து கொள்வதும், ஓரின உறவு கொள்வதும், சர்வ சாதாரணமான விஷயம் தான். ஆனால், ஒரு ஆண் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு விட்டு, பிறகு ஓரின உறவில் ஈடுபடுவது என்பது மிகுந்த வருத்தமளிக்கும் விஷயமாகும்.

அப்படி கண்ணீர் கடலில் மிதக்கிறார் ஒரு பெண். கடந்த 2018 ஆம் ஆண்டு நூலகங்களில் வேலை பார்த்து வந்த ஒரு ஆணும் பெண்ணும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். திருமணம் நடந்து முதல ஒரு வருடம் மிகவும் சந்தோஷமாகவே வாழ்க்கை சென்றுள்ளது.

சமீப காலமாக அந்த மனைவி, கணவனிடம் அதிகமான மாற்றங்களை உணர்ந்துள்ளார். இந்நிலையில், கணவனுக்கு வேலையும் பறிபோயுள்ளது. வேலை இல்லாத காரணத்தால் கணவன் வீட்டிலேயே இருந்துள்ளார். அவர் வீட்டில் இருக்கும் சமயத்தில் அதிகமான ஆண் நண்பர்கள் வீட்டிற்கு வருவதும், ஒரு அறைக்குள் சென்று பூட்டிக் கொள்வதும் வாடிக்கை ஆகி உள்ளது. அப்படி ஒரு நாள், அவர்கள் அறையில் இருக்கும்போது, மனைவி, அங்கிருந்த தன் கணவனின் மொபைலைப் பார்த்துள்ளார். அதில் அவரது கணவர் பிற ஆண்களுடன் உறவு கொள்ளும் படங்களும், வீடியோக்களும் இருந்துள்ளன.

இது குறித்து அவரது கணவரிடம் கேட்டபோது, தனக்கு திருமணத்திற்கு முன்னரே ஆண்களிடம் மட்டுமே விருப்பம் இருந்ததாகவும், பெண்களிடம் ஈர்ப்பு இருந்ததில்லை என்றும், ஒரு பெண்ணைத் திருமணம் செய்யவில்லை என்றால் ஊரார் கண்டபடி பேசுவார்கள் என்றே அந்தப் பெண்ணைக் காதலித்து மணந்ததாகவும் கூறியுள்ளார்.

இந்த பிரச்சனை குறித்து அந்தப் பெண் தனது கணவன் வீட்டாரிடம் கூறியபோது அவர்கள், அதனை ஒரு பொருட்டாகக் கருதவில்லை. இதனால் மனம் நொந்த மனைவி, கணவரை மாற்ற எடுத்த முயற்சிகள் அனைத்தும் விழலுக்கு இறைத்த நீராக, வேறு வழியில்லாமல் கணவர் பற்றி போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

newstm.in

Trending News

Latest News

You May Like