1. Home
  2. தமிழ்நாடு

தைப்பூசம் விரதம் இருப்பது எப்படி? - முருகன் அருள்பெற எளிய முறையில் விளக்கம்

தைப்பூசம் விரதம் இருப்பது எப்படி? - முருகன் அருள்பெற எளிய முறையில் விளக்கம்

தை மாதத்தில்தான் பூச நட்சத்திரமும் பௌர்ணமியும் கூடி வரும். அன்றைய தினமே தைப்பூசமாக கொண்டப்படுகிறது. இதன் காரணமாக தை மாதம் என்பது தெய்வீக மாதமாகும் என கருதப்படுகிறது. தைப்பூசம் தினம் தான் முருகனுக்கு உகந்த நாளாகும். அதோடு சிவனுக்கும், குரு பகவானுக்கும் கூட இந்த நாள் சிறப்புடையதாகும். பல சிறப்புக்கள் மிக்க தைப்பூச நாள் அன்று விரதம் இருந்தால் கேட்ட வரத்தை முருகபெருமான் தந்தருள்வார் என்பது நம்பிக்கை.

அந்த வகையில் இந்த ஆண்டு தைப்பூசம் நாளை (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படுகிறது. இந்த ஊரடங்கு கொரோனா காலத்தில் நாம் வீட்டிலிருந்தே முருகனை நினைத்து தைப்பூச விரதத்தை எப்படி கடைபிடிப்பது என்பது குறித்து அறிந்துக் கொள்வோம்.

தைப்பூசம் விரதம் இருப்பது எப்படி? - முருகன் அருள்பெற எளிய முறையில் விளக்கம்

தைப்பூசம் விரதம் இருக்கும் முறை?

  • நாள் முழுவதும் பூச நட்சத்திரம் இருப்பதால் காலை முதல் மாலை வரை முருகனை நினைந்து உபவாசம் இருந்து முருகனை தரிசித்து, வழிபாடு செய்வது நல்லது.
  • காலை மதியம் என இருவேளையும் பால், பழம் மட்டுமே அருந்தி விரதம் இருந்து மாலையில் முருகன் கோயிலிற்கு சென்று வழிபடுவது சிறந்தது. முருகனை வழிபடும் சமயத்தில் முருக வேலையும் சேர்த்து வழிபடுவது நல்லது. முடிந்தால் காலை, மாலை என இருவேளையும் முருகன் கோயிலிற்கு சென்று வழிபடுவது மேலும் சிறப்பை சேர்க்கும்.
  • முருக பக்தர்கள் பலர் தைப்பூச விரதத்தை 48 நாட்கள் இருப்பது வழக்கம். மார்கழி மாதத்தில் தொடங்கி தைப்பூசம் வரை விரதம் இருப்பது வழக்கம். அன்னை பார்வதி தேவி, முருகனுக்கு ஞானவேல் வழங்கியது இந்த நன்னாளில் தான். அதனால்தான் அன்று வேலையும் வணங்குவது நல்லது என்று ஆச்சாரியார்கள் கூறுகின்றனர்.
  • தைப்பூச நாளில் முருகனுக்குரிய வேலை வழிபடுவதன் பயனாக தீய சக்திகள் நம்மை அண்டாது. வறுமை நீங்கி செல்வமும், வசதி வாய்ப்புகளும் கிடைக்கப் பெறும் என்பது ஐதீகம்.


newstm.in

Trending News

Latest News

You May Like