சென்னையில் மண்டல வாரியாக கொரோனா பாதிப்பு எவ்வளவு ?

தமிழகத்தில் கொரோனாவின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 59,337 ஆக உயர்ந்துள்ளது. பலியானோரின் எண்ணிக்கை 757 ஆக அதிகரித்துள்ளது.
பிற மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு கட்டுப்படுத்தப்பட்ட நிலையில், தலைநகர் சென்னையில் மட்டும் பாதிப்பு கிடுகிடுவென பரவி வருகிறது. கடந்த சில நாட்களாக தினமும் சென்னையில் மட்டுமே அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருவதால் , சென்னையின் மொத்த பாதிப்பு 41,172 ஆக உயர்ந்துள்ளது.
இந்த நிலையில், சென்னையில் மண்டல வாரியான கொரோனா பாதிப்பு விபரங்களை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. அதிகபட்சமாக, ராயபுரத்தில் 6,288 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா நோய் உறுதி செய்யப்பட்டவர்களின் மண்டலவாரி பட்டியல்#Covid19Chennai#GCC #Chennai#ChennaiCorporation pic.twitter.com/OxpzyTJcKU
— Greater Chennai Corporation (@chennaicorp) June 22, 2020
இதைத் தொடர்ந்து, தண்டையார் பேட்டையில் 5,116 பேருக்கும், தேனாம்பேட்டையில் 4,967 பேருக்கும், கோடம்பாக்கத்தில் 4,485 பேருக்கும், அண்ணா நகரில் 4,385 பேருக்கும், திரு.வி.க.நகரில் 3,532 பேருக்கும், அடையாறில் 2,435 பேருக்கும், வளசரவாக்கத்தில் 1,719 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
Newstm.in