துறை வாரியாக எவ்வளவு கோடி ஒதுக்கீடு.. இதோ முழு விவரம்..!

2,676 பள்ளிகளில் வகுப்பறைகள் ரூ.65 கோடியில் தரம் உயர்த்தப்படும்.
* மூத்த குடிமக்கள் பராமரிப்புக்கு அன்புசோலை மையங்கள் அமைக்கப்படும்.
* முதல்வரின் காலை உணவு திட்டம், நகரப்பகுதிகளுக்கும் விரிவாக்கம் செய்ய ரூ.600 கோடி ஒதுக்கீடு
* ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் புதிய ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படும்.
* அரசு பல்கலைக் கழகங்களில் ஆராய்ச்சி மேம்பாட்டிற்கு ரூ.200 கோடி ஒதுக்கீடு.
* ஆசியாவிலேயே தலைசிறந்த பல்கலைக்கழகமாக அண்ணா பல்கலை மாற்றப்படும். இதற்காக ரூ.500 கோடி ஒதுக்கீடு
* ட்ரோன் தொடர்பாக புதிய பட்டய படிப்புகள் அறிமுகப்படுத்தப்படும்.
* தமிழகத்தில் அனைத்து வகை அரசு கல்லூரிகளின் மேம்பாட்டுக்காக ரூ.300 கோடி ஒதுக்கீடு
* 8 மாவட்டங்களில் அரசு கலைக் கல்லூரிகள் தொடங்கப்படும்.
* 2025-26ம் ஆண்டில் ஒரு லட்சம் மாணவர்களுக்கு ரூ.2500 கோடி கல்விக் கடன் வழங்கப்படும்.
* காஞ்சிபுரம் புற்றுநோய் மையத்தை மேம்படுத்த 120 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
* செமி கண்டக்டர் உற்பத்திக்கான தொழில்நுட்ப பூங்காக்கள் அமைக்கப்படும்.
துறை வாரியாக விபரம் பின்வருமாறு
* உயர் கல்வித்துறைக்கு 8,494 கோடி ரூபாய் ஒதுக்கீடு