எஸ்பிபி உடல்நிலை எப்படி உள்ளது.. கமல்ஹாசன் புதிய தகவல் !
பின்னணி பாடகர் எஸ்பிபி கொரோனா நோய் தொற்று காரணமாக கடந்த ஆகஸ்ட் 5 ஆம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தையடுத்து எக்மோ கருவி மற்றும் வெண்டிலேட்டர் கருவிகள் உதவிகளுடன் சிகிச்சைப்பெற்று வந்தார்.
தொடர்ந்து உடலில் முன்னேற்றம் ஏற்பட்டு சில நாட்களுக்கு முன்பு அவருக்கு கொரோனா நெகட்டிவ் வந்தது. இதைத்தொடர்ந்து சில நாட்களாக உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வந்தது.
இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் எஸ்பிபியின் உடல்நிலை மிகவும் மோசமடைந்ததால் அதிகபட்ச உயிர்காக்கும் கருவிகள் உதவியுடன் சிகிச்சைப்பெற்று வருவதாக நேற்றி இரவு மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனால் எஸ்பிபி ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் எஸ்.பி.பி உடல்நிலை குறித்து தவறான தகவல்களும் பரவின.
இ
தைத்தொடந்து நடிகர் கமல்ஹாசன் நேரடியாக மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை விவரம் குறித்து விசாரித்தார்.
அப்போது, எஸ்பிபி நன்றாக இருக்கிறார் என்று சொல்ல முடியாது, உயிர்காக்கும் கருவிகள் உதவியுடன் சிகிச்சை பெற்று வருகிறார் என கமல் தெரிவித்திருந்தார்.
newstm.in