1. Home
  2. தமிழ்நாடு

நடிகர் வடிவேலு எப்படி இருக்கிறார்? அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!!

நடிகர் வடிவேலு எப்படி இருக்கிறார்? அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!!


சென்னை அசோக் நகர் பகுதியில் 2 வீடுகளில் 10 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ள நிலையில், அந்தப்பகுதி தனிமைபடுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அந்தப் பகுதியை மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் ஆய்வு நடத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்ரமணியன், சென்னையில் 39,537 தெருக்கள் உள்ள நிலையில் 507 தெருக்களில் கொரோனா தொற்றாளர்கள் உள்ளனர் என கூறினார்.

அதில் 429 தெருக்களில் 3-க்கும் குறைவானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 78 தெருக்களில் 3 பேருக்கும், 42 தெருக்களில் 4 பேருக்கும்,18 தெருக்களில் 5 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

நடிகர் வடிவேலு எப்படி இருக்கிறார்? அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!!

6 முதல் 10 பாதிக்கப்பட்ட நபர்கள் உள்ள 4 தெருக்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக உள்ளன. 10 முதல் 25 பேர் பாதிக்கப்பட்ட நபர்கள் உள்ள ஒரு தெரு கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக உள்ளது என்று கூறினார்.

நடிகர் வடிவேலு உடல்நிலை குறித்து பேசிய அவர், அவருக்கு ஏ சிம்டம்ஸ் தொற்று மட்டுமே உள்ளது. அவர் நலமாக இருக்கிறார் என கூறினார். தமிழகத்தில், கொரோனா தொற்று பாதிப்பு உயர்ந்து, மீண்டும் அது குறையும். எனவே பயப்பட வேண்டிய அவசியம் இல்லை என்று கூறினார்.

நடிகர் வடிவேலு எப்படி இருக்கிறார்? அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!!

மேலும், கொரோனோவுக்கு தேவையான மருந்து நம்மிடம் தயராக உள்ளது. முதல் தவணை தடுப்பூசி 86% இரண்டாம் தவணை தடுப்பூசி 58% செலுத்தப்பட்டுள்ளது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

newstm.in

Trending News

Latest News

You May Like