எவ்வளவு தைரியம் இருந்தா என் தங்கச்சியை கூப்பிடுவே... நண்பனின் தலையைச் சிதைத்துக் கொலை..!
![1](https://newstm.in/static/c1e/client/106785/uploaded/0b9180c88d043d197b9dd4ae0a479a94.webp?width=836&height=470&resizemode=4)
சென்னையை சேர்ந்தவர் ரஞ்சித்குமார். இவர் கொடுங்கையூர் எழில் நகர் 6வது தெருவில் வசித்து வருகிறார்.இந்த நிலையில் தன்னுடன் கூலி வேலை செய்யும் ராயபுரத்தைச் சேர்ந்த சரவணன் என்பவரை சனி அன்று இரவு வீட்டிற்கு மது குடிக்க அழைத்துள்ளார். இரவு முழுவதும் இருவரும் மது அருந்திய நிலையில், வீட்டின் மொட்டை மாடியில் படுத்து உறங்கி உள்ளனர்.
காலை 5 மணிக்கு சரவணன், ரஞ்சித்குமாரிடம் எனக்கு உனது தங்கையை பிடித்துள்ளது. அவரை அழைத்து வா என கூற, அதிர்ச்சி அடைந்த ரஞ்சித்குமார் சரவணனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி அது கைகலப்பாக மாறி உள்ளது.
இதையடுத்து ரஞ்சித்குமார் வீட்டில் வைத்திருந்த பட்டா கத்தியை எடுத்து வந்து சரவணனை தலையில் வெட்டினார். இதில் சரவணன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த கொடுங்கையூர் போலீசார் சரவணனின் உடலை மீட்டு விசாரணை நடத்தினர். கொலை செய்துவிட்டு வீட்டிலேயே இருந்த ரஞ்சித்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.