இல்லத்தரசிகள் ஷாக்..! தங்கம் விலை தாறுமாறாக உயர்வு..!

கடந்த 20-ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,440 உயர்ந்து இதுவரை இல்லாத வகையில் புதிய உச்சமாக ரூ.66,480ஐ எட்டி பொதுமக்கள் தலையில் இடியை இறக்கியது. பின்னர் கடந்த 21-ம் தேதியில் இருந்து குறைந்து வந்த தங்கம் விலை நேற்று முன்தினம் மீண்டும் அதிகரித்தது. நேற்றும் சவரன் ரூ.320 உயர்ந்தது. அதன் தொடர்ச்சியாக இன்றும் தங்கம் விலை ரூ.840 அதிரடியாக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் வார துவக்க நாளான (திங்கள் கிழமை) மார்ச் 24ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு, 120 ரூபாய் சரிவடைந்து, 65,720 ரூபாய்க்கு விற்பனையானது. செவ்வாய் கிழமை மார்ச் 25ம் தேதி தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து, ஒரு சவரன் ரூ.65,480க்கு விற்பனை செய்யப்பட்டது.
நேற்று முன்தினம் (மார்ச் 26) தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.65,560க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று (மார்ச் 27) தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்து, ஒரு சவரன் 65,880 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில், இன்று (மார்ச் 28) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 840 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.66,720க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.105 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.8,340க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.840 அதிகரித்து, நகைப்பிரியர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளது. ஒரு சவரன் தங்கம் விலை புதிய உச்சமாக ரூ.66,720க்கு விற்பனை ஆகிறது.