இல்லத்தரசிகள் ஷாக்..! இன்று முதல் பால் விலை லிட்டருக்கு ரூ.2 உயர்வு..!

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் தேவையான கால்சியம் போன்ற முக்கிய ஊட்டச்சத்துக்களை வழங்கும் உணவுப் பொருளாக பால் உள்ளது. பல இந்தியர்கள் காலை ஒரு முறை, 11 மணிக்கு ஒரு முறை, மாலை ஒரு முறை என டீ, காபி குடிக்காமல் தங்கள் பொழுதை கழிப்பதே இல்லை. சிலருக்கு டீ குடிக்காமல் இருந்தால் தங்களுடைய வேலையே ஓடாது. அந்த அளவுக்கு மக்கள் மத்தியில் பால் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது.
இந்நிலையில் அமுல் நிறுவனம், இன்று முதல் பாலின் விலையை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தியுள்ளது.
இதுகுறித்து குஜராத் கூட்டுறவு பால் சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்ததாவது: பால் மற்றும் பால் பொருட்களை விற்பனை செய்யும் குஜராத் கூட்டுறவு பால் சங்கமானது, நாடு முழுவதும் மே 1, 2025 முதல் பாக்கெட் பாலின் விலையை லிட்டருக்கு ரூ. 2 உயர்த்த உள்ளதாக தெரிவித்துள்ளது.
36 லட்சம் பால் உற்பத்தியாளர்களுக்கு பால் உற்பத்திக்கான செலவுகள் அதிகரித்துள்ளதால் விலை உயர்த்தப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளது. இன்று முதல் 500 மில்லி லிட்டர் அமுல் கோல்டு பால் பாக்கெட் ரூ.34-க்கும், 1 லிட்டர் பால் பாக்கெட் ரூ.67-க்கும் விற்பனை செய்யப்படும்.
'சக்தி' வகையின் 500 மில்லி பாக்கெட் பால் ரூ.31-க்கும், 500 மில்லி பசும்பால் பாக்கெட் ரூ.29 ஆகவும், ஒரு லிட்டர் எருமைப் பால் பாக்கெட் ரூ.73 ஆகவும், ஒரு லிட்டர் 'டாசா' பாக்கெட் ரூ.55 ஆகவும் விற்பனை செய்யப்படும்... இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.