இல்லத்தரசிகள் ஷாக்..! தங்கம் விலை 3 நாட்களில் சவரனுக்கு ரூ.2800 உயர்வு..,!

தமிழகத்தில் நேற்று முன்தினம் (ஜூன் 11), ஆபரண தங்கம் கிராம், 9,020 ரூபாய்க்கும், சவரன், 72,160 ரூபாய்க்கும் விற்பனையானது. நேற்று (ஜூன் 12), தங்கம் விலை கிராமுக்கு, 80 ரூபாய் உயர்ந்து, 9,100 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 640 ரூபாய் அதிகரித்து, 72,800 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
இந்நிலையில் இன்று (ஜூன் 13) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,560 உயர்ந்து ஒரு சவரன் ரூ.74,360க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.195 அதிகரித்து, ஒரு கிராம் ரூ.9,295க்கு விற்பனை ஆகிறது.
கடந்த 3 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,800 அதிகரித்துள்ளது. ஒரு சவரன் தங்கம் விலை ரூ.74 ஆயிரத்தை கடந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது. தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.