1. Home
  2. தமிழ்நாடு

இல்லத்தரசிகள் ஷாக்..! 3 மாதத்தில் 10,000 உயர்ந்த தங்கம் விலை..!

1

ஜனவரி 1 ஆம் தேதி 57 ஆயிரம் என்ற அளவில் இருந்த ஒரு சவரன் தங்கம் விலை தற்போது 67 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

சென்னையில் நேற்று ரம்ஜான் பண்டிகை நாளில் (மார்ச் 31) காலை 22 கேரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.65 உயர்ந்து ஒரு கிராம் ரூ.8,425-க்கும், சவரனுக்கு ரூ.520 உயர்ந்து ஒரு பவுன் ரூ.67,400-க்கும் விற்பனையானது. இதேபோல், 24 காரட் தங்கம் ரூ.72,952-க்கு விற்பனையானது. வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.113-க்கு விற்பனையானது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை ரூ.1,13,000 ஆக இருந்தது.

இந்நிலையில் நேற்று ஒரே நாளில் 2-வது முறையாக தங்கம் விலை உயர்ந்தது. காலையில் ரூ.520 மாலையில் ரூ. 200 என இரண்டு முறை தங்கம் விலை உயர்ந்தது. இதன்மூலம் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.720 உயர்ந்து ரூ.67,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.90 உயர்ந்து ரூ.8450-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த 3 மாதங்களில் ஒரு சவரன் தங்கம் விலை சுமார் ரூபாய் 10 ஆயிரம் அளவுக்கு உயர்ந்துள்ளது. தங்கம் விலை கடந்த சில மாதங்களாகவே உயர்ந்து வருவது சாமானிய மக்களையும், நகைப் பிரியர்களையும் பெரிதும் கவலையில் ஆழ்த்தி உள்ளது.

"இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ. 7,150 ஆக இருந்தது. ஒரு சவரன் ரூ. 57,200ஆக இருந்தது. ஆனால் இன்று ஒரு சவரன் தங்கம் ரூ.67 ஆயிரத்தைக் கடந்துள்ளது. அதாவது 3 மாதங்களில் ரூ.10,000 அளவுக்கு தங்கம் விலை உயர்ந்துள்ளது.

Trending News

Latest News

You May Like