ராமர் புகைப்படம் பொறிக்கப்பட்ட பிளேட்டுகளில் பிரியாணி விற்பனை : அடித்து நொறுக்கப்பட்ட ஓட்டல்..!
டெல்லியில் ஜகாங்கிர்புரி பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் நேற்று சிக்கன் பிரியாணி, ராமர் புகைப்படம் பொறிக்கப்பட்ட பிளேட்டுகளில் விற்பனை செய்யப்பட்டது. மேலும், அது பேப்பர் பிளேட் என்பதால் பிரியாணியை சாப்பிட்டு அந்த பிளேட்டுகள் குப்பைத் தொட்டிகளில் வீசப்பட்டன. ராமர் புகைப்படம் இருக்கும் பிளேட்டுகள், எச்சில் பிரியாணியுடன் குப்பையில் வீசப்பட்டு இருப்பது அங்கிருக்கும் சிலரை கோபப்படுத்தியது.
இதுகுறித்து அவர்கள் இந்து அமைப்புகள் சிலருக்கு தகவல் கொடுத்தனர். இதன்பேரில், அங்கு வந்த இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் அந்த ஓட்டலை அடித்து நொறுக்கினர். மேலும் அதன் உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்களையும் தாக்கினர். தகவலறிந்து அங்கு வந்த போலீஸார் நடத்திய விசாரணையில், ஓட்டல் உரிமையாளர் மீது தான் தவறு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அவர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்னர்.
In Jahangirpuri, Delhi Jihadis were serving Biriyani on paper plates with images of Lord Rama, locals and Bajrang dal objected to this and allegedly thrashed the jihadi.
— 🇮🇳RishiSwaroop🇮🇳(MODI KA PARIVAAR) (@intent56) April 23, 2024
Jihadi has been arrested and taken for treatment. pic.twitter.com/d9bArcj9yF