1. Home
  2. தமிழ்நாடு

தமிழகத்தில் கொளுத்தும் வெயில் : இந்த டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க... கலெக்டர் அட்வைஸ்!

1

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வழிகாட்டு முறைகளை வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தில் கோடைகால வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், வெப்ப அலைக்கு எதிராக பொதுமக்கள் பாதுகாப்புக்காக மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார். கோடைகால வெப்ப அலையை எதிர்கொள்ள வழிமுறைகள் குறித்த அறியுறுத்தல்கள் வழங்கியுள்ளார்.

இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் கூறியுள்ளதாவது: தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் காரணமாக வெப்ப அலை எச்சரிக்கைகள் வானிலை ஆய்வு மையம் மற்றும் மாநில அரசு சார்பாக வழங்கப்பட்டுள்ளன. இதையடுத்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொதுமக்கள் பாதுகாப்புக்காக பேருந்து நிலையங்கள், நிறுத்தங்கள் மற்றும் பொது இடங்களில் குடிநீர் குடில்கள், ஓஆர்எஸ் கரைசல்கள் உள்ளிட்ட வசதிகள் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்று தெரிவித்தார்.

மேலும், வெயிலில் நேரடியாக பணியாற்றும் தொழிலாளர்கள், சாலையோர வியாபாரிகள், காவல் மற்றும் தீயணைப்பு துறையினர், பேருந்து இயக்கத்தில் உள்ள பணியாளர்கள் ஆகியோர் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டியதும், தொழிற்சாலைகள் மற்றும் தொழிலகங்களில் குடிநீர், உப்பு-சர்க்கரை கரைசல் உள்ளிட்ட நீரிழப்பை ஈடுசெய்யும் பானங்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றும் அவர் அறியுறுத்தினார்.

தொழிற்சாலைகளில் மருந்தகங்கள், டிஸ்பென்சரிகள் இருந்தால் அந்த இடங்களில் கோடை காலத்தில் ஏற்படும் வெப்ப அலையை எதிர்கொள்ளும் வகையில் அவசரகால மருந்துப் பொருட்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளார்.

கோடை வெப்பத்திலிருந்து தற்காத்துக் கொள்வதற்கான வழிகாட்டல்கள்:


போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும், பயணத்தின் போது குடிநீர் எடுத்துச் செல்லவும், ஓஆர்எஸ், எலுமிச்சை சாறு, இளநீர், மோர் போன்ற பானங்களை குடிக்கலாம், மென்மையான பருத்தி ஆடைகள் அணிய வேண்டும், வெளியே செல்லும்போது காலணிகள், தொப்பிகள் அணிந்து, குடை பயன்படுத்த வேண்டும், மதிய நேர வெயிலில் செல்வதை முடிந்தளவு தவிர்க்கக்க வேண்டும்.

Trending News

Latest News

You May Like