1. Home
  2. தமிழ்நாடு

கொரோனாவிற்கு சிகிச்சை அளிக்க வீட்டிற்கே வரும் மருத்துவமனை.. சென்னை ஐஐடி அசத்தல் !

கொரோனாவிற்கு சிகிச்சை அளிக்க வீட்டிற்கே வரும் மருத்துவமனை.. சென்னை ஐஐடி அசத்தல் !


கொரோனா நோயாளிகளை பரிசோதித்து தனிமைப்படுத்தி சிகிச்சை அளிப்பதற்காக சென்னை ஐஐடி MediCAB எனும் நடமாடும் மருத்துவமனையை வடிவமமைத்துள்ளது. 

எளிதில் அமைக்கக் கூடிய இந்த நடமாடும் மருத்துவமனை கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு, அவர்கள் இருக்கும் இடத்திற்கே சென்று அவர்களுக்கு பரிசோதனை செய்து தனிமை சிகிச்சை அளிக்க முடியும் என்று ஐஐடி மெட்ராஸ் வியாழக்கிழமையன்று வெளியிட்ட அறிக்கையில் இதை தெரிவித்துள்ளது.

சென்னை ஐஐடி மெட்ராஸ் வடிவமைத்த MediCAB என்ற நடமாடும் மருத்துவமனை கேரளாவில் வயநாடு மாவட்டத்தில் உள்ள கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

கொரோனாவிற்கு சிகிச்சை அளிக்க வீட்டிற்கே வரும் மருத்துவமனை.. சென்னை ஐஐடி அசத்தல் !

Modulus Housing என்னும் இந்த Startup நிறுவனம் நாடெங்கிலும் பரவலாக, இந்த நடமாடும் மருத்துவப் பிரிவை, அதாவது மைக்ரோ ஹாஸ்பிடல்களை உருவாக்குவதில் பணியாற்றி வருகிறது.

இந்த மெடிகேப்பில் நான்கு மண்டலங்கள் இருக்கும். ஒன்று மருத்துவருக்கான அறை, இரண்டாவது தனிமைப்படுத்தப்படும் வார்டு. மற்றும் இரண்டு படுக்கைகள் கொண்ட ஐசியு பிரிவு ஆகியவை இருக்கும். Modulus Housing என்னும் Startup நிறுவனம், ஸ்ரீ சித்ரா திருனல் இன்ஸ்டிடியூட் ஃபார் மெடிக்கல் சயின்சஸ் அண்ட் டெக்னாலஜி (SCTIMST) உடன் கூட்டு சேர்ந்து, இந்த திட்டத்திற்கு தேவையான சான்றிதழ்கள் மற்றும் தனிப்பட்ட சாதனங்களை வழங்கியது.

கொரோனாவிற்கு சிகிச்சை அளிக்க வீட்டிற்கே வரும் மருத்துவமனை.. சென்னை ஐஐடி அசத்தல் !

2018 ஆம் ஆண்டில் இரண்டு ஐ.ஐ.டியின் முன்னாள் மாணவர்களால் நிறுவப்பட்ட Modulus Housing என்னும் நிறுவனம், IIT-M Incubation Cell  உதவியுடன், முன்னரே எழுப்பட்ட கட்டமைப்புகள் மூலம் வீடுகளை கட்டும் ஒரு புரட்சிகரமான திட்டத்தை கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

கேரளாவில் இந்த முன்னோடித் திட்டத்தின் மூலம், மைக்ரோ மருத்துவமனைகளின் தொழில்நுட்பம் மற்றும் நன்மைகளைப் பயன்படுத்தி நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இதை எட்டு மணி நேரத்தில் நான்கு பேர் எளிதாக அமைக்கலாம். இந்த அமைப்பை பிரித்து மடிக்கும் போது, இது எடுத்துக் கொள்ளும் பரப்பளவு  ஐந்து மடங்கு அளவு  குறைக்கப்படுகின்றது. 

 

newstm.in 

Trending News

Latest News

You May Like