மனைவி தாய் வீட்டிற்கு சென்றப்போது கொடூரம்.. மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தை..

தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே சண்முகம் (37) - தனலட்சுமி (28) தம்பதியர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.
லாரி டிரைவரான கணவன், மனைவி இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. வீட்டில் தகராறு ஏற்பட்டால் தனது இரு மகள்களை வீட்டிலேயே விட்டு விட்டு, தனலட்சுமி மட்டும் தனது தாய் வீட்டுக்கு சென்றுவிடுவார்.
அதன்பின் நீண்ட நாட்கள் கழித்து வீடு திரும்புவார். இது அவ்வப்போது நடந்துள்ளது. ஒதேபோல் கடந்த 20 நாட்களுக்கு முன்பு கணவன் - மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது கோபித்துக்கொண்டு தாய் வீட்டிற்கு சென்ற தனலட்சுமி அண்மையில் கணவர் வீட்டிற்கு திரும்பினார்.
அப்போது தனது மகளுக்கு நடந்த கொடூரம் குறித்து அறிந்து அவர் அதிர்ச்சியடைந்தார். மனைவி வீட்டில் இல்லாத நேரத்தில் 10 வயது மகளை அவரது தந்தை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனை வீடு திரும்பிய தாயிடம் சிறுமி கூறிவிட்டு கதறி அழுதுள்ளார்.
இதனால் வேதனை அடைந்த தனலட்சுமி, தனது கணவர் மீது போலீசில் புகார் அளித்தார். அதில், தான் சண்டை போட்டு விட்டு தாய் வீட்டுக்கு சென்ற சமயத்தில், வீட்டில் இருந்த 10 வயதான 2வது மகளை, கணவர் பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிவித்திருந்தார்.
அதன்பேரில், போலீசார் சண்முகத்தை பிடித்து விசாரணை நடத்திய போது, அவர் தனது மகளை பலாத்காரம் செய்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து, பாலக்கோடு அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து சண்முகத்தை கைது செய்தனர்.
newstm.in