1. Home
  2. தமிழ்நாடு

தன்பாலின சேர்க்கை கொடூரம்.. சிறுவனை கொன்று புதைத்த இளைஞர் !

தன்பாலின சேர்க்கை கொடூரம்.. சிறுவனை கொன்று புதைத்த இளைஞர் !


விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த நொச்சிக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவர் தனது 13 வயது மகன் தேவன்ராஜை காணவில்லை என மரக்காணம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அந்த புகாரின் பேரில் மரக்காணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுவனை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது சிறுவனிடம் இருந்த செல்போன் உரையைடல்களை எடுத்து போலீசார் விசாரித்தனர். அப்போது தேவன்ராஜ் தொலைபேசிக்கு கடைசியாக அதேபகுதியைச் சேர்ந்த அபினேஷ் என்ற இளைஞர் அழைத்து பேசியது தெரியவந்தது.

இதனையடுத்து அபினேஷ் வீட்டிற்கு சென்ற போலீசார் அவரை பிடித்து வந்து சிறுவன் தேவன்ராஜ் குறித்து விசாரணை செய்தனர். விசாரணையில் அபினேஷ் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்ததால் அவர் மீது சந்தேகம் வலுத்தது.

இதனையடுத்து நடத்திய கிறுக்குப்பிடி விசாரணையில் இளைஞர் அபினேஷ் அளித்த வாக்குமூலம் போலீசாரை திக்குமுக்காட வைத்தது. அதாவது 13 வயது சிறுவனை கிளி பிடிக்க வருமாறு அழைத்து சென்று தன்பாலின சேர்க்கையில் ஈடுபட முயன்றபோது மறுத்துள்ளார்.

தன்பாலின சேர்க்கை கொடூரம்.. சிறுவனை கொன்று புதைத்த இளைஞர் !

இதனால் மிரட்டுவதற்காக கழுத்தை நெரித்து போது உயிரிழந்ததாகவும், அதன்பின் தன்பாலின சேர்க்கையில் ஈடுபட்டு பின் உடலை சுடுகாட்டில் புதைத்தது தெரியவந்துள்ளது.

மேலும் இதற்கு முன்பு ஏற்கெனவே தனது தந்தை கலைமணிக்கும், சிறுவனின் தந்தை கோவிந்தராஜ்க்கும் சீட்டு விளையாடும்போது ஏற்பட்ட பிரச்சனைக்கு பழிக்கு பழி வாங்கவே கொலை செய்ததாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார்.
தன்பாலின சேர்க்கை கொடூரம்.. சிறுவனை கொன்று புதைத்த இளைஞர் !

இதனையடுத்து அபினேஷை மரக்காணம் போலீசார் கைது செய்து சிறுவன் புதைக்கப்பட்ட இடத்தில் இருந்த உடலை தோண்டி எடுத்து உடற்கூறு ஆய்வு செய்தனர்.

மேலும் ஓராண்டுக்கு முன்பு இதேபோன்று ஒரு சிறுவனை கொலைசெய்து உடலை சவுக்கு தோப்பில் வீசியதாகவும் அபினேஷ் கூறியுள்ளார். அவை தொடர்பாகவும் போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.


newstm.in

Trending News

Latest News

You May Like