இந்த மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..!!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக காலையில் இருந்து திருவாரூரில் மழை பெய்து வரும் நிலையில்
முன்னெச்சரிக்கை காரணமாக நாளை(26-11-2021) திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிப்பதாக அம்மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
கனமழை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்திற்கும் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் உருவாக உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக தூத்துக்குடி, நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்களுக்கு ஏற்கனவே சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.