1. Home
  2. தமிழ்நாடு

வரலாற்று சாதனை! தஞ்சை பெரிய கோவிலில் தமிழில் வழிபாடு!

வரலாற்று சாதனை! தஞ்சை பெரிய கோவிலில் தமிழில் வழிபாடு!


தஞ்சாவூர் மாமன்னன் ராஜராஜ சோழனின் 1035-வது சதயவிழாவையொட்டி அருள்மிகு பெருவுடையாருக்கு தமிழில் வழிபாடு நடைபெற்றது.

தஞ்சை பெரியகோவிலில் ஒவ்வொரு வருடமும் ஐப்பசி மாதம் சதய நட்சத்திரம் அன்று மாமன்னன் ராஜராஜ சோழனின் சதயவிழா கொண்டாடப்பட்டு வருகிறது

இந்த நிலையில், ராஜராஜ சோழனின் 1035-வது ஆண்டு சதயவிழா இன்று நடைபெற்றது. விழாவையொட்டி, அவரது திருவுருவச் சிலைக்கு மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதைத்தொடர்ந்து தஞ்சை பெரிய கோவிலில் அருள்மிகு பெருவுடையாருக்கு தமிழில் தேவாரம், திருமுறைப்பாடி வழிபாடு நடைபெற்றது. மேலும், அருள்மிகு பெருவுடையாருக்கு 48 வகையான அபிஷேகம் நடைபெற்றது.

அருள்மிகு பெருவுடையாருக்கு முதல் முறையாக தமிழில் வழிபாடு நடத்தப்பட்டால், தமிழ் ஆர்வலர்களும், பொது மக்களும் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Trending News

Latest News

You May Like