இன்று 5 மாவட்டங்களில் மிக அதிக கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் எச்சரிக்கை!!

மத்திய கிழக்கு அரபிக்கடல் மற்றும் வங்கக்கடல் பகுதிகளில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகத்தில் இடைவிடாது கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில், இன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, நீலகிரி, கோவை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் மிக அதிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், மீதமுள்ள மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் அறிவித்துள்ளது.
மேலும், இந்த கனமழை நவம்பர் 15 ஆம் தேதி வரையிலும் நீட்டிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்த வரையிலும் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் எனவும், நகரின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மத்திய கிழக்கு மற்றும் அதனையொட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்வதை தவிர்க்கும்படி அறிவிக்கப்பட்டுள்ளது.