1. Home
  2. தமிழ்நாடு

கொட்டித்தீர்க்கும் கனமழை; அவசர உதவி எண்கள் அறிவிப்பு..!

Q

நீலகிரி மாவட்டம், ஊட்டியில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் பல்வேறு சுற்றுலச தலங்கள் மூடப்பட்டு உள்ளது. தொட்டபெட்டா, பைரன் பாரஸ்ட், லேம்ஸ்ராக், சூட்டிங் பாயின்ட், படகு இல்லம் உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா தலங்கள் மூடப்பட்டுள்ளன.
ஊட்டியில் 6 இடங்களில் மரங்கள் விழுந்த நிலையில் உடனுக்குடன் மரங்கள் வெட்டி அகற்றப்பட்டன. மின்சாரம் தொடர்பான பாதிப்பு இருந்தால் 9498794987 என்ற எண்ணை தொடர்பு கொண்டு புகார் அளிக்க வேண்டும். அவசர கால உதவிக்கு 1077 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
3 பேர் பத்திரமாக மீட்பு
நள்ளிரவு கூடலூர் ஓவேலி வனச்சரகத்தில் யானை விரட்டும் காவலராக பணியாற்றி வருகிறார் ராஜேஷ். இவர் விடுமுறை பெற்று கேரளா மஞ்சேரியை நண்பர்கள் ஆண்டோதாமஸ், 53, அருண் தாமஸ், 44, ஆகியோருடன், ஓவேலி அண்ணா நகர் - தருமகிரி சாலை வழியாக கூடலூர் நோக்கி காரில் சென்றுகொண்டு இருந்தார்.
செல்லும் வழியில் ஆற்றைக் கடக்க முயன்ற போது, கார் வெள்ளத்தில் சிக்கியது. மூவரும் தப்பிக்க வழியின்றி, காரின் மீது ஏறி நின்று சத்தமிட்டனர். கூடலூர் நிலைய தீயணைப்பு வீரர்கள், நள்ளிரவு 1:00 மணிக்கு, அப்பகுதிக்கு சென்று, போராடி அதிகாலை 3:30 மணிக்கு மூவரையும் உயிருடன் மீட்டனர்.
அவலாஞ்சியில் 215 மி.மீ., மழைப்பதிவு
கடந்த 24 மணி நேரத்தில், நீலகிரி மாவட்டத்தில் பெய்த மழை விபரம் மில்லி மீட்டரில் பின்வருமாறு:
அவலாஞ்சி- 215
எமரால்டு- 94
பந்தலூர்- 93
சேரங்கோடு- 90
தேவாலா- 87
அப்பர் பவானி, கூடலூர்-74
செருமுள்ளி, ஓவேலி, பாடந்தொரை- 60

Trending News

Latest News

You May Like