இந்த மாவட்டங்களில் எல்லாம் கனமழை இருக்கு.. வானிலை மையம் எச்சரிக்கை !!

தமிழகத்தில் சேலம், ஈரோடு, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. ஏனைய மாவட்டங்களில் வெயில் அடித்தாலும் அவ்வப்போது மழை பெய்கிறது.
இந்நிலையில், தெற்கு ஆந்திரா மற்றும் வடதமிழகத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
நீலகிரி, வேலூர், திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அடுத்த 24 மணிநேரத்தில் இடியுடன்கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இதேபோன்று, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணி
ப்பேட்டை, திருவண்ணாமலை, செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், தருமபுரி, சேலம், நீலகிரி, கடலூர் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடியுடன்கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசா மழை பெய்யும். மாநகரின் அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸை ஒட்டி பதிவாகக் கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக, நீலகிரி மாவட்டம் தேவாலாவில் 6 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. நீலகிரி மாவட்டம் அவலாஞ்சி, கோவை மாவட்டம் வால்பாறை ஆகிய இடங்களில் தலா 4 சென்டிமீட்டர் மழையும் பெய்துள்ளது இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
newstm.in