1. Home
  2. தமிழ்நாடு

கனமழை: இந்த மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை

கனமழை: இந்த மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை


புதுக்கோட்டை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தெற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. காற்றழுத்த வேறுபாடு இன்னும் அதிகரிக்கவில்லை.

எனினும் அது அதே இடத்தில் நகராமல் நிலை கொண்டு இருப்பதால் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதில் தாமதம் ஆகிறது. அது அடுத்த 24 மணி நேரத்தில் தீவிரமாகி காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது மேலும் மேற்கு வடமேற்கு திசையில் வரும் நாட்களில் தமிழக கரையை நோக்கி நகரக் கூடும்.

கனமழை: இந்த மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை

இதன் காரணமாக இன்று ராமநாதபுரம், நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை முதல் மிக கன மழையும், மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை, தேனி, தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

எனினும் புதுக்கோட்டை, திருவாரூர், தஞ்சை, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் காலை முதல் மழை பெய்துவருகிறது. இதனால் இன்று புதுக்கோட்டை, திருவாரூர் மாவட்டங்களில் மழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக அத்தியாவசிய பொருட்களை இருப்பு வைத்துக்கொள்ளவும் மாவட்ட ஆட்சியர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

newstm.in

Trending News

Latest News

You May Like