தமிழ்நாட்டில் நாளை வெப்பம் அதிகரிக்கும்..!
தமிழ்நாட்டில் நாளை அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என்றும், அதிக வெப்ப நிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் என்பதால், ஓரிரு பகுதிகளில் அசௌகரியம் ஏற்படலாம் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது..
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.