1. Home
  2. தமிழ்நாடு

மெட்ரோவில் இதயம்! 100 கிமீ வேகத்தில் பாய்ந்து சென்ற ரயில்!

1

காமினேனி மருத்துவமனை (Kamineni Hospitals) தலைநகர் ஹைதராபாத்தின் எல்.பி. நகர் பகுதியில் இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனையில் இருந்து தானமாகக் கிடைத்த இதயத்தை, லக்டி-கபூல் எனும் இடத்தில் இருக்கும் கிலென் ஈகில்ஸ் குளோபல் மருத்துவமனைக்குக் (Gleneagles Global Hospital) கொண்டு செல்ல வேண்டும். இரண்டு மருத்துவமனைகளுக்கும் இடையிலான தூரம் 13 கிலோமீட்டர்கள் ஆகும்.

போக்குவரத்து நெரிசல் மிகுந்த இந்த வழித்தடத்தில், சாலை மார்க்கமாக இருதயத்தைக் கடத்துவது எளிதல்ல என நினைத்து, மருத்துவக் குழு புதிய திட்டம் வகுத்துள்ளது. அதன்படி, மெட்ரோ நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டது. இதுபோன்ற அவசர நிலையில் செயல்படுத்தப்படும், பச்சை நிற மெட்ரோ வழிப்பாதையில் (Green Corridor) எல்.பி நகர் முதல் லக்டி-கபூலுக்கு இதயத்தை கொண்டு செல்ல திட்டமிடப்பட்டது.

தொடர்ந்து மெட்ரோ ரயில் நிர்வாகமும், மருத்துவக் குழுவும் இணைந்து ரயில் பயணத்தைத் தொடங்கியது. மருத்துவர்கள் தங்கள் கையில் குளிரூட்டப்பட்ட பாதுகாப்புப் பெட்டியினுள் வைத்திருந்த இதயத்துடன் மெட்ரோவில் பயணம் செய்தனர்.

அவசரம் அறிந்த மெட்ரோ ரயில் நிர்வாகமும், நிர்ணயிக்கப்பட்ட வரம்பிற்குள் ரயிலை வேகமாக செலுத்தியது. கடைசியாக, எல்.பி. நகரில் இருந்து புறப்பட்ட ரயில் வெறும் 13 நிமிடங்களில், 13 கிமீ கடந்த, 13 மெட்ரோ ரயில் நிறுத்தங்களைத் தாண்டி சென்றடைந்தது. அதாவது ரயில் சுமார் 100 கி.மீ வேகத்தில் செலுத்தப்பட்டுள்ளது.

அங்கிருந்து உடனடியாக இதயம் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டு, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காகக் காத்திருந்த நபருக்கு அது பொருத்தப்பட்டு; அவர் உயிர் காப்பாற்றப்பட்டது. மெட்ரோ நிர்வாகம் மற்றும் மருத்துவர்களின் ஒத்துழைப்புடன் நடந்த இந்த மனித உயிர் காக்கும் போராட்டத்தை பொதுமக்களும், சமூக வலைத்தள வாசிகளும் பாராட்டி வருகின்றனர்.

Trending News

Latest News

You May Like