பிரபல அரசியல் தலைவருக்கு இருதய அடைப்பு..!
பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜாவுக்கு நேற்று திடீரென மூச்சுத் திணறலுடன் நெஞ்சு வலியும் ஏற்பட்டது. இதையடுத்து சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவர்கள் உடல் நிலையை பரிசோதனை செய்ததில் அவருக்கு ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட்டு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து எச்.ராஜாவுக்கு இன்று காலை இருதய சிகிச்சை செய்ய டாக்டர்கள் முடிவு செய்தனர்.ரத்த அடைப்புகளை சரி செய்து ஸ்டண்ட் வைக்கப்பட்டது. சிகிச்சைக்கு பிறகு அவர் மருத்துவரின் கண்காணிப்பில் இருந்து வருகிறார். அவரை குடும்பத்தினர் கவனித்து வருகின்றனர்.
இந்நிலையில், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில், சிகிச்சை பெற்று வரும் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச்.ராஜாவை, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் நேரில் சென்று உடல் நலம் குறித்து விசாரித்தார். மேலும், மருத்துவர்களிடம் அவரது உடல்நலம் குறித்தும், அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் கேட்டறிந்தார்.
அத்துடன், ஹெச்.ராஜா விரைவில் பூரண உடல் நலம் பெற்று மக்கள் பணியாற்ற இறைவனிடம் பிரார்த்தனை செய்தார். இதேபோல், முக்கியத் தலைவர்கள் பலரும் ஹெச்.ராஜாவை நேரில் நலம் விசாரித்து வருகின்றனர்.