1. Home
  2. தமிழ்நாடு

சென்னையில் ஹெல்த் வாக் டிராக்! முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்..!

1

உடல் நலத்திலும், உடற்பயிற்சியிலும் அதிக ஆர்வம் காட்டும் நமது சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஒருமுறை ஜப்பான் சென்றிருந்தபோது அங்கிருக்கும் ஹெல்த் வாக் டிராக்கை பார்த்துள்ளார். அப்போது அவருக்கு இந்த ஐடியா தோன்றியுள்ளது. அதாவது நமது தமிழகத்திலும் இந்த திட்டத்தை கொண்டு வர முடிவு செய்துள்ளார்.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களுக்கும் இந்த நடைபாதை தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மா. சுப்பிரமணியன் அறிவித்திருந்த நிலையில், இந்த ஹெல்த் வாக் ட்ராக் தமிழகத்தில் மதுரையில் முதலாவதாக அமைக்கப்பட்டது.

இளைஞர்களிடம் இதய நோய் மற்றும் புற்றுநோய் ஆகியவை அதிகரித்துள்ளதாகவும் இந்த நடைபாதை மக்கள் ஆரோக்கியமாக வாழ வழிவகை செய்யும் எனவும் அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார்.

மேலும் உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வின்படி ஒரு நபர் ஒரு நாளைக்கு 10,000 அடிகள் நடந்திருக்க வேண்டும். இது எட்டு கிலோமீட்டர் உள்ள நடைபாதையில் சராசரியாக வந்துவிடும்.மேலும் அந்த நடைபாதையின் இரு புறத்திலும் மரங்கள் நடப்படும். ஒவ்வொரு கிலோமீட்டர் தூரத்திலும் நடைபயிற்சி மற்றும் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு பலகைகள் வைக்கப்படும்.

அதேபோல் நடை பயிற்சிக்கு வருவோர் சிறிது நேரம் ஓய்வெடுக்க ஆங்காங்கே இருக்கைகளும் அமைக்கப்படும்.மாதத்தில் முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் சுகாதார அதிகாரிகள் இங்கு வாக்கத்தான் போட்டிகளையும் நடத்துவர். இதன் மூலம் ஹெல்த் வாக் ட்ராக் பிரபலம் அடையும் எனவும் அமைச்சர் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சென்னையில் முத்துலட்சுமி ரெட்டி பூங்காவில் இருந்து பெசன்ட் நகர் கடற்கரை வழியாக அன்னை வேளாங்கண்ணி தேவாலயம் வழியாக மீண்டும் முத்துலட்சுமி ரெட்டி பூங்கா வரை சாலை அமைக்கப்பட்டுள்ளது.

இன்று நவம்பர் 4ம் தேதி காலை 6 மணிக்கு சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இத்திட்டத்தை தொடங்கி வைத்து நடை பயிற்சி மேற்கொள்ள உள்ளார்.

Trending News

Latest News

You May Like