சென்னை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் துரைக்கண்ணு அனுமதி!

தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு உடல் நலக்குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் காலமான செய்தி அறிந்து, அவருக்கு நேரில் சென்று ஆறுதல் கூற வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு சென்னையில் இருந்து சேலத்திற்கு சென்றார். அப்போது, அவரது கார் திண்டிவனம் அருகே சென்று கொண்டிருந்தபோது அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கடந்த 12 நாட்களுக்கு முன்பு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், அமைச்சர் துரைக்கண்ணுவுக்கு தீவிராக மூச்சுத்திணறலால் ஏற்பட்டுள்ளதாகவும், இதனால், அவரது உடல் நிலை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால், மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் அமைச்சர் துரைகண்ணு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.