1. Home
  2. தமிழ்நாடு

மூளையைத் தின்னும் அமீபா - சுகாதாரத் துறை அதிரடி அறிவிப்பு..!

1

பொது சுகாதாரத் துறை இயக்குனர் வெளியிட்ட செய்திக் குறிப்பில், “அமீபிக் மெனிங்கோ என்செபாலிடிஸ் என்னும் மூளையை அரிக்கும் நோய் தொற்று தொடர்பான உயிரிழப்புகள் கேரளாவில் நிகழ்ந்ததை கருத்தில் கொண்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளது. மேலும் வழிகாட்டுதல் நெறிமுறைகளும் வெளியிடப்பட்டு உள்ளன.

  • பொதுமக்கள் குறிப்பாக குழந்தைகள் குளிப்பதற்காக நீண்ட நாட்கள் தேங்கி நிற்கும் தண்ணீரையோ அல்லது மாசுபட்ட தண்ணீரையோ பயன்படுத்த வேண்டாம் என்று கண்டிப்பாக அறிவுறுத்தப்பட வேண்டும்.
  • நீர்நிலைகள், குளங்கள், ஏரிகள் போன்ற தண்ணீர் தேங்கி இருக்கும் இடத்தைச் சுற்றிலும் சுற்றுப்புறச் சுகாதாரம் உறுதி செய்யப்பட வேண்டும்.
  • உள்ளாட்சி அமைப்புகள், தனியாருக்கு சொந்தமான நீச்சல் குளங்களில் மக்கள் நல்வாழ்வுத் துறை வழிகாட்டலின் படி சுகாதாரத்தை உறுதி செய்ய வேண்டும். அடிக்கடி குளோரினேஷன் செய்து பராமரிக்க வேண்டும். மேலும், 2 பிபிஎம் அளவிற்கு மேல் குளோரினேஷன் செய்வதை உள்ளூர் சுகாதார அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.
  • நீர்நிலைகளை சுத்தமாக வைத்திருக்க உள்ளாட்சி அமைப்புகளுக்கு உத்தரவிட வேண்டும். மேலும் நீர்நிலைகளில் நுழைவதை கட்டுப்படுத்த வேண்டும்.
  • அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனை மருத்துவர்களுக்கும், அறிகுறிகளின் அடிப்படையில் சந்தேகத்திற்குரிய பாதிப்புகள் உள்ளவர்களை கண்டறிய ஆலோசனை வழங்கப்பட வேண்டும். மேலும், சந்தேகத்திற்குரிய பாதிப்புகள் உள்ளவர்களை உடனடியாக மூன்றாம் நிலை பராமரிப்பு மையங்களுக்கு பரிந்துரைக்க வேண்டும்.

Trending News

Latest News

You May Like