1. Home
  2. தமிழ்நாடு

8 கிலோமீட்டர் தூரம் டோலி கட்டி தூக்கிச் சென்றும் காப்பாற்ற முடியவில்லை... கிராம மக்கள் கண்ணீர்..!

Q

கொடைக்கானலில் ரோடு வசதி இல்லாத தொலைதூர கிராமமாக இருப்பது வெள்ளகெவி கிராமம். கொடைக்கானலை கண்டறிய முதன் முதலில் ஆங்கிலேயர்கள் இக்கிராமத்தை கடந்தே வந்துள்ளனர். இருந்த போதும் கிராமத்திற்கு ரோடு வசதி என்பது கானல் நீராக உள்ளது. உடல் நலம் பாதிக்கப்படுபவர்கள் 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கொடைக்கானல், அல்லது அதே நேரத்தில் 11 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பெரியகுளத்திற்கு டோலி கட்டி தூக்கி செல்லும் அவலம் உள்ளது.

இந்த நிலையில், வெள்ள கவி கிராமத்தைச் சேர்ந்த ராம்குமார் மனைவி மேகலா 35 , நேற்று இரவு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. கிராமத்தினர் டோலி கட்டி 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கும்பக்கரை பகுதிக்கு தூக்கி சென்று அங்கிருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பெரியகுளம் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில் கொண்டு சென்றனர். செல்லும் வழியில் அவர் இறந்து விட்டார்.

தொடரும் துயரத்திற்கு தீர்வாக தங்களுக்கு ரோடு வசதி தேவை என்று இக்கிராமத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். அரசு விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும்.

Trending News

Latest News

You May Like