1. Home
  2. தமிழ்நாடு

"அழைக்கிறார்.. அழைக்கிறார்.. நம்ம அன்புமணி அண்ணன்" பாமக மாநாடு பாடல் வெளியீடு!

Q

பாமக வன்னியர் சங்க முழு நிலவு மாநாடு 12 ஆண்டுகளுக்கு பிறகு வரும் மே 11 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த மாநாட்டுக் குழு தலைவராக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் நியமிக்கப்பட்டுள்ளார். மாமல்லபுரத்தை அடுத்த திருவிடந்தையில் இந்த மாநாடு நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் கடந்த சில வாரங்களாக நடைபெற்று வருகிறது.
இந்த மாநாட்டிற்கான பந்தக்கல் முகூர்த்தம் கடந்த வாரம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து மாநாட்டில் பங்கேற்க வருமாறு காட்சி நிர்வாகிகள் மற்றும் பாட்டாளி சொந்தங்களுக்கு கட்சியினர் சார்பில் அழைப்பிதழ் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவனுக்கும் பாட்டாளி மக்கள் கட்சியினர் முழு நிலவு மாநாட்டிற்கான அழைப்பிதழை வழங்கினர்.
சித்திரை முழுநிலவு மாநாட்டிற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் இன்று மாநாட்டிற்கான பாடல் வெளியிடப்பட்டது. சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், மாநாட்டு பாடலை வெளியிட்டார். அழைக்கிறார்.. அழைக்கிறார்.. நம்ம அன்புமணி அண்ணன் நம்மை அழைக்கிறார்.. என்ற வரிகளுடன் இந்த பாடல் தொடங்குகிறது.
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தி இந்த மாநாடு நடத்தப்படுகிறது. பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கம் சார்பில் நடத்தப்படும் இந்த சித்திரை முழு நிலவு, வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடாக 1998 ஆம் ஆண்டு முதல் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெற்று வருகிறது.
கடைசியாக கடநத் 2013 ஆம் ஆண்டுதான் பாமக சித்திரை முழுநிலவு மாநாடு நடத்தப்பட்டது. அதன்பிறகு கடந்த 12 ஆண்டுகளாக இந்த மாநாடு நடத்தப்படாமல் இருந்தது. இந்நிலையில் 12 ஆண்டுகளுக்கு பிறகு பாமக மாநாடு இந்த ஆண்டு சித்ரா பவுர்ணமி நாளில் நடத்தப்படவுள்ளது.
அடுத்த ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத்துக்கு தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கட்சியின் தொண்டர்களை உற்சாகப்படுத்தும் வகையிலும் பாமகவின் பலத்தை காட்டும் வகையிலும் இந்த ஆண்டு மாநாடு நடத்த பாமக முடிவு செய்துள்ளது. 12 ஆண்டுகளுக்கு பிறகு நடத்தப்படும் மாநாடு என்பதால் இதனைக் அக்கட்சி தொண்டர்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்து காத்துள்ளனர்.

Trending News

Latest News

You May Like