ஹாத்ரஸ் சம்பவத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 134 ஆக உயர்வு..!

உ.பி ஹாத்ரஸ் மாவட்டத்தின் சிக்கந்தராராவ் தாலுகாவின் முகல்கடி கிராமத்தில் நேற்று ஆன்மிகக் கூட்டம் நடைபெற்றது. இதை சாக்கார் நாராயண் சாகர் விஷ்வ ஹரி என்பவர் நடத்தினார். இந்த நிகழ்ச்ச்சியில் மக்கள் அமர்வதற்காக மிகப்பெரிய அளவில் பந்தல்போடப்பட்டிருந்தது.இக்கூட்டத்தில் சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். கூட்டம் நடைபெற்ற இடத்தில் போதுமான காற்றோட்டம் இல்லை என்று கூறப்படுகிறது. தவிர, அதிக அளவில் அனல் காற்றும் வீசியுள்ளது. இதனால் கூட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, நிகழ்ச்சி நடைபெற்று முடிந்த போது, சிக்கார் நராயண் சாகர் விஷ்வ ஹரி கிளம்பிச் சென்றார். அப்போது அவரது காலடி மண்ணை எடுக்க பொதுமக்கள் போட்டி போட்டுக் கொண்டு குனிந்ததாக கூறப்படுகிறது. அப்போது ஏற்பட்ட நெருக்கடியில் பொதுமக்கள் பலர் கீழே விழுந்ந்தனர். இந்த கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 134 பேர் உயிரிழந்துள்ளனர். அதோடு பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.