1. Home
  2. தமிழ்நாடு

கேரளாவிலோ, இந்தியாவிலோ உயர்பதவியில் இருக்கும் ஒருவர் இவ்வாறு நடந்து பார்த்துண்டா?

1

கேரளா மாநிலம் கொல்லத்தில் நேற்று முன்தினம் சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்ட அம்மாநில கவர்னர் ஆரிப் கானை கடுமையாக விமர்சித்துள்ள முதல்வர் பினராய் விஜயன், சட்டத்தை விட மேலானவர்கள் யாரும் இல்லை என்று சாடியுள்ளார்.

கேரள மாநில கவர்னர் ஆரிப் முகமது கான் நேற்று முன்தினம் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக கொல்லம் சென்று கொண்டிருந்த போது அவரது வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து சி.பி.எம். கட்சியின் மாணவர் பிரிவான எஸ்.எப்.ஐ அமைப்பினர் கருப்புக்கொடி காட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

இதனைத் தொடர்ந்து கவர்னர் ஆரிப் முகமது கான் உடனடியாக காரில் இருந்து இறங்கி  சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். கவர்னரின்  இந்தச் செயலை அம்மாநில முதல்வர் பினராய் விஜயன் கடுமையாக விமர்சித்துள்ளார். 

இது குறித்து அவர் கூறுகையில்,கேரளாவில் சி.ஆர்.பி.எப். நேரடியாக ஆட்சி செய்திடுமா? அவர்களால் ஒரு வழக்கினை பதிவு செய்திட முடியுமா? மாநிலத்துக்கு சி.ஆர்.பி.எப். வீரர்களை அனுப்புவது விசித்திரமாக இருக்கிறது. காவல்துறையினர் அவர் விரும்பிய வகையில் செயல்படவில்லை என்று கவர்னர் புகார் கூறியுள்ளார். சி.ஆர்.பி.எப். போலீஸார் அவர் விருப்பப்படி நடந்து கொள்வார்களா? சட்டத்தைவிட மேலானவர்கள் யாரும் இல்லை.

அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு எதிராக இம்மாதிரியான போராட்டங்கள் நடக்கும். அதற்கு எதிர்வினையாற்றும் போது ஒரு வரைமுறையைக் கடைபிடிக்க வேண்டும். முதல்வருக்கு எதிரான போராட்டங்கள் எவ்வாறு கையாளப்படுகின்றன என்று கவர்னர் கேட்டுள்ளார். 

நான் பல பயணங்களை மேற்கொண்டுள்ளேன். அதற்கு முன்பாக நான் பயணிப்பதற்கு அந்தப் பாதை பாதுகாப்பாக இருக்கிறதா என்று உறுதி செய்து கொள்வேன். அவர் நடந்து கொண்டது பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு எதிரானது இல்லையா? ஒரு போராட்டம் நடக்கும் போது பயணிக்க அந்தப்பாதை பாதுகாப்பானது தானா என்பதை போலீஸார் உறுதி செய்வார்கள் என்பது கவர்னருக்கு தெரியும். 

போராட்டக்காரர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதை தெரிந்து கொள்ள யாராவது தங்களின் வாகனத்தை விட்டு இறங்குவதை எப்போதாவது கேள்விப்பட்டிருக்கிறோமா? கோழிக்கோட்டில் போலீசார்  தன்னுடன் வரவேண்டாம் என்று அவர் கூறினார். 

மாநிலத்தின் தலைவர் அவர், மிகவும் பாதுகாக்கப்பட்ட நபர், இதனை அவர் வேண்டாம் என்று கூறுகிறாரா? முன்பு ஒரு முறை கேரள போலீசார் தான் சிறந்தவர்கள் என்று கவர்னர் கூறினார். அவர்கள் அவருக்கு போதாதா? கேரளாவிலோ, இந்தியாவிலோ உயர்பதவியில் இருக்கும் ஒருவர் இவ்வாறு நடந்து பார்த்துண்டா?

சட்டமன்றத்தில் கொள்கை விளக்க உரையின் கடைசி பத்தியை மட்டும் வாசிக்க வேண்டும் என்ற கவர்னரின் முடிவு அரசியல் சாசனத்தை அவமதிக்கும் செயல். கொள்கை விளக்க உரையை வாசிக்க கவர்னருக்கு நேரமில்லை. ஆனால், சாலையில் அமர்ந்து 1.30 மணி நேரம் போராட்டம் நடத்த அவருக்கு நேரம் இருக்கிறது. இவ்வாறு முதல்வர் பினராய் விஜயன் விமர்சித்துள்ளார்.

Trending News

Latest News

You May Like